Thursday 11 December 2008

மதிப்பிற்குரிய தமிழக அரசியல் தலைவர்களுக்கும் திரையுலக தலைவர்களுக்கும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தாழ்மையான வேண்டுகோள்!

அன்புடையீர்!

இலங்கைத் தமிழர் துயர் கண்டு கண்டனக் குரல்களை எழுப்பி மத்திய அரசை அவர்கள் துயர் தீர்க்க ஆவன செய்யுமாறு நீங்கள் வலியுறுத்துவது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பெரும்பான்மையான அனைத்து அரசியல் கட்சிகளும்; ஒருமித்த குரலோடு இவ் வேண்டுகோளை விடுக்க முயல்வது மத்திய அரசினை செயற்பட வைக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர தமிழக அரசியல் தலைவர்களினதும் திரையுலக தலைவர்களினதும் ஏகோபித்த ஆதரவிற்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த முப்பது வருட இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளைக் கடந்து வந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். பல சகோதரப் படுகொலைகளே எமது விடுதலைப் போரின் முக்கிய குறிக்கோளாக பரிணமித்திருப்பதே அதன் சாதனையாகவும் தமிழ் மக்களின் வேதனையாகவும் அவர்களின் இழப்புகளுக்கு காரணமாகவும் இருப்பதை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. இதனையே முதன்மைப் படுத்தி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பி பலனளிக்காத பலமாக பாலைவனத்திற்கு தமிழ் மக்களை நகர்த்தும் முனைப்புகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்து தமிழ் இளைய பிராயத்தினரை தற்கொலைக்கு தயார்படுத்துவதை நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழரின் துயரம் கண்டு பொங்கியெழும் தமிழக மக்களின் ஆதரவு விடுதலைப் புலிகளின் அழிவுப் பாதைக்கு உடந்தையாகி தடம் புரளக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இலங்கை அரசியல் சூழ்நிலைகளை நீங்கள் ஓரளவு புரிந்து வைத்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறோம். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்க வேண்டி குரல் கொடுக்கும் அதே நேரம் இலங்கை பேரினவாத சக்திகளின் குரல்களுக்கு உணவளிப்பனவாக உங்கள் ஆதரவு செயல்படாத தன்மையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் இலங்கையில் தமிழ் மக்களின் இரத்தக் களரி தொடர்ந்து ஓடுவதற்கே உங்கள் ஆதரவு உறுதுனையாகும்.

தமிழ் மக்களுக்கு சமமான நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை பெரும்பான்மை சிங்கள இனமக்களில்; பெரும்பான்மையோர் ஓரளவு ஏற்றுக் கொண்ட போதும் அவர்களில் ஒரு சிறுபான்மையோரான பௌத்த பேரினவாதத்தை வலியுறுத்தும் சத்திகளின் எதிர்ப்புகளை மீறி அவர்களால் செயற்பட முடியாத சூழ்நிலை காணப்படுவதே இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு நடைமுறைப் படுத்தப்படாமைக்கு முக்கிய காரணமாகும். இப் பேரினவாத சக்திகளின் கரங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் செயல்பாடுகள் அமைதல் பாதகமானதாக அமையும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் 50 கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பதும், தமக்கென வேறு நாடு எதுவும் இல்லையென்பதும் என்ற வாதங்களே பேரினவாத இனவாதிகளின் பிரச்சாரமாக இனவாத தூண்டுதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழகமும் இந்தியாவும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்தும் உத்தரவாதம் அளிக்கும் உறுதிமொழிகளே இவர்களை பலவீனப்படுத்தும். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இது நகைப்பிற்குரியதாக தோன்றினாலும் சற்று சிந்தித்தால் இதுவே உண்மை என்பது புலனாகும்.

இத்தனை இழப்புகளின் பின்பும் இன்றைய இலங்கை அரசு நியாயமான தீர்வினை முன்வைக்க முனைப்புடன் செயல்படாமை வேதனை அளிக்கிறது. சர்வ கட்சி மகாநாட்டு முடிவுகள் சாதுரியமாக பின் போடப்பட்டுக் கொண்டு செல்வது இலங்கை அரசின் நோக்கங்களை கேள்விக்குறியாக்கின்றது. இலங்கை அரசு இனவாத சத்திகளுக்கு அடிபணிந்து தமிழ் மக்கள் மீது நியாயமற்ற நடுநிலையான சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ள முடியாத தீர்வினை திணிக்காமல் பார்த்துக் கொள்ளும் பாரிய பொறுப்பினை இந்திய அரசு புறந்தள்ளி வைக்காமல் செயல்படும் உந்துசத்தியாக தமிழக அரசியல் தலைவர்கள் பங்களிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களிடையே ஜனநாயக அரசியலை வளர்க்க விரும்பும் அரசியல் சத்திகளுக்கு உங்கள் ஆதரவு பெருக வேண்டும். அவர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி நிலைநாட்ட உங்களால் பெருமளவில் உதவ முடியும். இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையே தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும். அவர்கள் வலிமையை ஒருமுகப்படுத்தும். மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் பண்பினை இலங்கைத் தமிழர் அரசியலில் வலிமைப்படுத்தும் வகையில் உங்கள் செல்வாக்கு அமைய வேண்டும். சகோதரப் படுகொலைகள் நிறுத்தப்படுவதற்கு உங்கள் வலிமை பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகள் வேற்றுமைகள் பல இருப்பினும் ஒற்றுமையுடன் செயல்பட உங்களால் ஊக்கமும் உற்சாகமும் உதவியும்; அளிக்க முடியும். விடுதலைப்புலிகளின் தவறான போக்கினை அவர்களுக்கு வலியுறுத்தி அழிவுப்; பாதையிலிருந்து அவர்களை மீட்க வழியமைக்க வேண்டும்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை வலியுறுத்தி நிற்கும் உங்களது கோரிக்கைகள் பயனற்றனவாக போகாமலிருக்க வேண்டுமெனில் அதனை சாத்தியப்படுத்தும் ஏனைய அம்சங்களையும் அதனுடன் சேர்த்து வலியுறுத்த வேண்டும். முன்னைய போர் நிறுத்த ஒப்பந்தங்கள் விடுதலைப் புலிகளினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு ஏனைய இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் போராளிகளும் தமிழ் அரசியல் தலைவர்களும் கல்விமான்களும் படுகொலை செய்யப்பட்டனர். இன்னுமொரு போருக்கான முஸ்தீபு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத தளபாடங்களை வேண்டிக் குவிக்கவும் அவற்கான நிதியினை மக்களிடம் வசூலிக்கவும் கேலிக்கூத்தாக சமாதானப் பேச்சு வார்த்தைகளினை நடத்தவுமே போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மக்களின் அன்றாட தேவைகளும் அவர்களின் துயரம் களைய செய்யப்பட வேண்டியவைகளும் பலிக்கடாக்களாகவே பயன்படுத்தப்பட்டன. மேற்படி நிகழ்வுகள் இந்த முறையும் நடைபெறாமல் இருப்பதற்கான உத்தரவாதத்தையும் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் சிறைக்கைதிகளாக இல்லாமல் தாம் விரும்பிய பகுதிகளில் வாழ அனுமதிக்கும் உரிமையையும் விடுதலைப் புலிகளை வழங்கும்படி நிர்ப்பந்திக்கும் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றினை வலியுறுத்துவது மட்டுமே சாத்தியமானதும் சரியானதும் தமிழ் மக்களுக்கு பலமும் பாதுகாப்பும் அளிப்பதுமாக இருக்க முடியும்.

இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும்படி மத்திய அரசினை நிர்பந்திக்கும் உங்கள் ஒருமித்த செயல்பாடுகள் பலனளிக்கவேண்டுமென நாம் விரும்புகிறோம். மறுபுறத்தில் தமிழ்நாடு எல்லா வகையிலும் சிங்கள மக்களின் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் என்ற உண்மையும் தெளிவாக பிரச்சாரப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இனவாத சத்திகளை சீண்டிவிடவே உங்கள் ஆதரவு பேரினவாதிகளால் பயன்படுத்தப்;படும். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள அவர்களுடன் உறவை வலுப்படுத்துவதே பயனுள்ளதாகும்.

தனிநாட்டுக் கோரிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவுகள் பற்றி நாம் விபரிக்க வேண்டியதில்லை. தமிழ் நாடும் ஒருகாலகட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடியதும் அதன் பாதகத்தன்மைகளைப் புரிந்து இந்திய மாநிலங்களில் ஒன்றாக உரிமைகளுடன் வாழ ஏற்றுக் கொண்டதும் அதன் மூலம் பாரிய அழிவுகள் தவிர்க்கப்பட்டு இன்று வலிமை பொருந்திய பொருளாதார சுபீட்சமுடைய மாநிலமாக திகழ்வதை நினைவு கூரும்படி கேட்டுக் கொள்கிறோம். இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களும் தனிநாட்டுக் கோரிக்கையினைன கைவிட்டால் தமிழ் நாட்டினை ஒத்த அல்லது அதிலும் மேன்மையான உரிமைகளைப் பெறவது சாத்தியமானது என்பதை நீங்கள் வலியுறுத்த வேண்டும். அதனை எமது மக்கள் பெற்றுக் கொள்ளவும் நீங்கள் பெருமளவில் உதவ முடியும். தமிழ் மக்களுக்கு பலமளிப்பதும் பாதுகாப்பு வழங்குவதுமான போர் நிறுத்தம் ஒன்றினை வலியுறுத்தி விடுதலைப் புலிகளை சமாதானப் பாதைக்கு இட்டுச் செல்வதில் நீங்கள் பெருமளவில் செயலாற்ற முடியும். உங்கள் செயல்பாடுகளின் சாதக பாதக தன்மைகளை உணர்ந்து செயல்படுவீர்களென இங்கு அல்லலுறும் தமிழ் பேசும் மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.

இறுதியாக மறுபடியும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர தமிழகத்தின் ஏகோபித்த ஆதரவுக் குரல்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு நியாயமான உரிமைகள் கிடைக்கப் பெற உங்கள் ஆதரவு பாரிய ஆதாரமாக அமைய வேண்டும். உங்கள் ஆதரவு மேலும் தொடரவும் மேலும் செழுமை பெறவும் வேண்டுகிறோம்.

தமிழ் சமாதான ஒன்றியம்

10-12-2008

Sunday 9 November 2008

லண்டனில் இரு ‘தலித்திய’ நூல்களின் விமர்சன அரங்கு

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு:

இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:



“இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”


தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப்பெரும் தலைவரும், சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் முன்னோடிகளில் ஒருவரும், இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இலங்கைத் தலித் மக்களின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியுமான மறைந்த தோழர். எம்.சி. சுப்பிரமணியத்தின் வாழ்வையும் பணியையும் ஆளுமையையும் சித்திரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு



“எம். சி : ஒரு சமூக விடுதலைப் போராளி”


வரலாற்றைப் போல சிறந்த ஆசான் வேறில்லை. சமகாலத் தலித் அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குக் கடந்தகால தலித் மக்களின் போராட்ட வரலாறு குறிந்தும், முன்னோடித் தலித் தலைவர்கள் குறித்தும் ஆழமான வாசிப்பும் கூர்மையான விமர்சனப் பார்வையும் நமக்கு அவசியமானவை. சாதியொழிப்பில் அக்கறையுள்ள தோழர்கள் அனைவரையும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளுமாறும் தொடரும் கலந்துரையாடலில் பங்கெடுக்குமாறும் அழைக்கிறோம்.



இடம்
: QUAKERS MEETING HOUSE

BUSH ROAD, WANSTEAD

LONDON, E11 3AU.



நாள்: 06 டிசம்பர் 2008 சனி மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை

Saturday 11 October 2008

இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும் : பொதுக்கூட்டம்

இலங்கை ஜனநாயக ஒன்றியம் நடத்தும்

பொதுக்கூட்டம்

இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும்
வடகிழக்குப்பிரதேசங்களில் பிரத்தியேக நோக்குடன்

பேச்சாளர்: முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
(பிரதான ஆய்வாளர், பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனம்)

South Ruislip Methodist church,
Queens Walk, South Ruislip,
Middlesex HA4 0NL

சனிக்கிழமை 11 ஒக்டோபர் 2008
பி.ப 2.00 - பி.ப 5.00 வரை

(முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான ஆய்வாளரும் இலங்கையில் நன்கறியப்பட்ட பொருளியல் நிபுணருமாவார். இவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இலங்கை அரசின் நிதி, திட்டமிடல் அமைச்சுக்கும் பொருளாதாரம், பொருளியல் திட்ட சீர்திருத்தம், பொருளாதாரம் மீது போரின் பாதிப்பு ஆகிய விடயங்கள் பற்றி ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். புராட்போர்ட் பல்கலைக்கழகம், ஐக்கியநாடுகளின் சமாதானக்கல்வித்துறை பற்றிய பயிலல்களில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பொருளாதாரமும் போரும், போர், பிள்ளைகள், பெண்கள், பொருளாதார வறுமை, சமத்துவமின்மை ஆகியவற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் பொதுவாக போரும் உள்நாட்டுப்போரும் என்ற விடயம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்; புத்தகங்களின் துணையாசிரியராக இருந்துள்ளார். கொன்டெம்பரரி சவுத் ஏசியா என்று ரவுட்லெட்ஜ் பிரசுரிக்கும் ஜேர்னலின் சர்வதேச நெறியாள்கைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். தற்சமயம் புல்பிரைட் ஆய்வாளராக வாஷிங்டன் டி.சி.யின் ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் வரும் வருடம் பணிபுரியவுள்ளார்.)

Thursday 14 August 2008

Sri Lanka War : BBC News

Thursday 26 June 2008

Commemorate the Life and Work of Miss.Maheswary Velautham

Maheswary Velautham Memorial Committee

Invites you to a meeting to


Commemorate the Life and Work of Human Rights Activist,

Miss Maheswary Velautham, LLB,

Who was brutally assassinated (gunned down) at her family home in Karaveddi, Jaffna, Sri Lanka on 13 May 2008,

on

Sunday 13 July 2008
from 11.30 a.m. to 5.00 pm

at the

Conway Hall
25 Red Lion Square, London WC1
(nearest tube: Holborn )


Speakers from Sri Lanka and the Diaspora including

Professor Tissa Vitharana – Minister, APRC Chairman, Sri Lanka

Ingrid Massage – Amnesty International, UK

Nissam Kariyapper - SLMC, Sri Lanka

Mr Varathakumar – Tamil Information Centre, UK

M K P Chandralal - Forum for Human Dignity, Sri Lanka

Teresa O'Donoghue - Art of living, India

And others.

‘Maheswary Velautham was a powerful voice, an able lawyer, a dedicated human rights activist, a humane social worker, a religious humanist, a modern rationalist a remarkable philosopher, an excellent orator and a unique writer. She was a literateur who dedicated herself to clear conscience’
- Dr. T. C. Rajaratnam

Rsvp: mageswarymemorialcommitee@gmail.com

Wednesday 25 June 2008

Finding the road to Peace

by Rohini Hensman

For the overwhelming majority of people in Sri Lanka, the civil war has been a disaster. Those in the war zones of the North and East have been worst affected, suffering death, displacement, and destruction of their livelihoods. But the lives of many in other parts of the country have been devastated too. Numerous soldiers as well as civilians have been killed and maimed; their families have suffered bereavement and loss of breadwinners. Terrorist attacks create an atmosphere of fear and insecurity, because anyone could be a victim of the next one. Government efforts to fund the war by printing money has led to hyperinflation far worse than that occurring in other Asian countries affected by spiralling oil prices; foreign borrowings are creating a debt trap. Finally, precious democratic rights and freedoms are under attack, not only in LTTE-dominated areas, where they were destroyed long ago, but also in government-controlled areas. A symptom of this is the assault on journalists whose only crime is that they have tried to report the truth. This is not just a denial of the journalists’ right to freedom of expression, but also a denial of the public’s right to information about issues that are of vital importance to them; both are indispensable pillars of democracy.

It would not be an exaggeration to say that all but a tiny minority are sick and tired of the war, ready to do or endure anything to end it. Why, then, has it not been ended so far? One major reason is that there is so much confusion about the question of HOW to end it. The other is that the war enables a small oligarchy to monopolise power, and they have no interest in ending it because their power might be curtailed if that happens.

Negotiations with the LTTE

One road that appeared to promise peace was a ceasefire and negotiations with the Tigers. The longest journey down this road followed the CFA of 2002, but there were other attempts earlier. Why did they all fail?

A dispassionate look at the evidence leads us to conclude that the primary reason was that the LTTE under Prabakaran DOES NOT WANT a democratic settlement of the conflict. He is not willing to settle for anything less than a separate, exclusively Tamil state under his totalitarian control. This is why he has used every ceasefire – above all the last one – to prepare for war and eliminate critics and opponents. He even tried to kill his own lieutenant Karuna Amman when the latter expressed doubts about the goal of Tamil Eelam, thus driving him out along with the bulk of the LTTE’s Eastern cadre.

The logical conclusion is that negotiations with the LTTE cannot, by themselves, bring peace. No one should foster illusions that they can, because that makes disillusionment and the turn to war all the more extreme when the talks break down. That does not mean there should never be negotiations with the Tigers; but in future, any ceasefire agreement leading to talks should be accompanied by a human rights agreement monitored by an independent party, preferably the UN. If that had been the case in 2002, hundreds of Tamil critics of the LTTE would not have lost their lives, and thousands of children would not have been conscripted. Even if and when the war broke out again, it would not have been possible for either side to attack civilians with impunity, as they have been doing. Without this condition, a ceasefire and peace talks could actually prolong the war, by decimating the peace constituency among Tamils and by allowing both sides to rearm.

A Military Solution

When negotiations with the LTTE turned out to be a dead end, various governments backtracked and pursued what appeared to be another path to peace: a military victory over the LTTE. That is the current situation, and there have been similar attempts before. In all cases in the past, they failed to end the war by defeating the LTTE. The same thing seems to be happening today. The victory in the East was a result of the split in the LTTE and Karuna’s defection. But now a stalemate seems to have been reached, with neither the government nor the LTTE making any headway.

A purely military strategy cannot possibly bring peace, because the war is a result of long-standing and absolutely justifiable grievances among Tamils, who have suffered discrimination, persecution and violence in Sri Lanka for decades. Like pus oozing from an infected wound, the LTTE is a product of those grievances. The organisation was formed in 1976, and according to DBS Jeyaraj, had only 30 members – 7 of them part-timers – by July 1983. If it has grown to be a formidable military and terrorist outfit, it is thanks to the anti-Tamil pogroms of 1983 and the subsequent violence against Tamils, which have fed its recruiting and fund-raising drives. To try to defeat it without a political settlement providing justice to Tamils is like trying to mop up the pus without healing the infected wound. The process could go on for ever. Like negotiations with the LTTE, this road leads to a dead end.

Again, this doesn’t mean that military action by the state should be ruled out in all circumstances. But where it becomes necessary, it should be carried out strictly in accordance with international law, taking all precautions to avoid civilian casualties and harm to non-combatants. Otherwise it, too, will end up prolonging the war by stirring up Sinhala extremism and helping to send recruits and supporters into the arms of the LTTE.

The Third Alternative

If neither peace talks with the LTTE nor a military offensive to wipe it out can end the war, what is the alternative? The third road to peace is a political solution which protects the human and democratic rights of all members of all communities in all parts of the island, and it has hardly been explored. Such a solution, if accepted, would convince the overwhelming majority of Tamils that they would have a far brighter future in a united democratic Sri Lanka than in a fascist Tamil Eelam. Support for the LTTE would vanish rapidly, leaving only fanatical hardliners who would not be able to hold out for long.

The key requirement of a political solution that satisfies all communities is that it should be democratic through and through. This means, first and foremost, abolishing the Executive Presidency, which negates the rule of the people by concentrating dictatorial power in the hands of one person. The attempt to curtail the powers of the president by passing the 17th Amendment failed because, ironically, the president has the power to override it. It is therefore clear that there is no point trying to tinker with the system: the Executive Presidency has to go. Secondly, all the rights that have been taken away from the people should be restored, starting with the right to life. Thirdly, the principle of equal rights for all, special privileges for none, should be adhered to. And lastly, government should be brought closer to the people.

It is the third requirement that seems to cause most problems. On the one hand, Sinhala nationalists feel that Sinhalese Buddhists should have special privileges, while everyone else should only be allowed to live in Sri Lanka on sufferance, or, perhaps, be driven out altogether. Tamil nationalists feel the same about the territory they claim as their own: Tamils should have special privileges in the Northeast, while non-Tamils should only be allowed to live there on sufferance, or be driven out altogether, like the Muslims and Sinhalese of the North. A democratic political solution must ensure that all people in all parts of the island have equal rights, including the right to communicate with the state in their own language.

The idea that government should be brought closer to the people has also been opposed by Sinhala nationalists, who cannot reconcile themselves to the idea that people in provinces where the majority are Tamil-speaking should control government powers over the police and land. This is why they insist on an authoritarian unitary state, where the central government would be able to wield these powers throughout the country. Their argument that devolution of power to the provincial level would lead to the triumph of separatism is contradicted by historical experience, which shows, on the contrary, that excessive concentration of power in a mono-ethnic centre leads to separatism in a multi-ethnic country. Their unitary formula also deprives people from poorer provinces with a Sinhala-speaking majority from controlling their own lives and resources.

A new, democratic constitution would, if implemented, not only lead to the end of the war but also empower the vast majority of people of all communities. The most serious move in this direction occurred from 1995 to 2000, during the Kumaratunga presidency.

It was scuttled largely due to UNP intransigence, although the SLFP leadership was also to blame for failing to pursue it with sufficient persistence, and for putting too much emphasis on negotiations with the LTTE. Under the Rajapakse presidency, hopes for a political solution were revived by the creation of the APRC, and at first, those hopes appeared to be justified. The talks were incomparably more inclusive than previous talks between the government and LTTE, and a proposal that would satisfy the democratic majority of all communities was well on the way to being crafted.

Yet in a bizarre twist, the ruling party and president put one obstacle after another in the way of the APRC process, finally consigning the whole exercise to the dustbin when the president proclaimed that a ‘solution’ would have to be found within the present constitution: a constitution that has not only been a major cause of the war, but has also been responsible for a conflict in which tens of thousands of Sinhalese were killed by Sinhalese! The UNP, which could have put the president and his party on the spot by proclaiming their support for the APRC process, instead helped to sabotage it. It looks less and less likely that a political solution can emerge during the term of the present government, but that does not change the fact that there is no other way of healing the wound that exudes war and terrorism. This is therefore a road that leads to peace, unlike the dead-ends of a purely military solution and peace talks with the LTTE.

Eliminating Obstacles on the Road to Peace

Having identified the road to peace, the next task is to eliminate the obstacles blocking the way to our destination. One is undoubtedly the LTTE, and we have already said that the best way to remove this obstacle is to propose a political solution that drains away its support base. The other obstacle is the government. The experience of the last sixty years tells us that the two parties which have been in power during this period are not capable of the task. Both have pandered to totalitarian Sinhala nationalism, and the SLFP, whose human rights record was not as bad as that of the UNP, is catching up rapidly. In other words, their commitment to democracy is very much in doubt.

Yet various minority parties have gravitated towards one or the other, or to one at one time and the other at another time. It is understandable that the leaders of parties which are being targeted by the LTTE might want the security of being protected by the state, but supporting a corrupt and brutal Sinhala chauvinist government in order to obtain a share in the spoils, as the EPDP and TMVP have been doing, is surely a betrayal of their constituency.

If minority parties can be criticized for supporting parties following undemocratic Sinhala nationalist agendas, it is even more condemnable that Left parties have done the same. It is a supreme irony that today, ‘the Left’ and ‘Marxists’ in Sri Lanka have been identified with the JVP, whose ‘Leftism’ is drowned out by its Sinhala nationalism. But there is a very good reason why this has happened: the JVP has retained its independence and separate identity, whereas the LSSP and CP have submerged their identities in various Popular Fronts with the SLFP, even at times when it has had a rabidly Sinhala nationalist agenda. Some of the smaller breakaway Left parties, on the other hand, have in the past been in favour of appeasing the LTTE, in the mistaken belief that it was fighting for self-determination for Tamils.

Pandering to Sinhala nationalism on one side and Tamil nationalism on the other, Left parties have lost their support amongst working people of all communities. Rebuilding that support would entail asserting their independence in no uncertain terms. Having a separate May Day rally was an encouraging gesture, but it needs to be followed up with much stronger action, above all dissociation from a government which was condemned by Archbishop Desmond Tutu and other prominent human rights defenders for horrific crimes against its own civilian population, and consequently lost its seat on the UN Human Rights Council. At the same time, Left parties need to make it clear that they do not support the LTTE, but stand for a just and democratic political solution to the civil war. If they do this, they could form a pole of attraction for progressive minority parties, and rally the overwhelming majority of working people behind them. Together, they could constitute a force capable of sweeping aside the biggest obstacle on the road to peace, and replacing it with a government genuinely committed to human rights and democracy.
www.island.lk

Thursday 19 June 2008

போரை நிறுத்த வேண்டு கோள்

புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சிங்கள மொழி பேசும் மனிதர்களே!

இலங்கையில் நடைபெறும் போரிலிருந்து தப்பி வந்து போரைப் பயன்படுத்தி அகதி அந்தஸ்து பெற்று புலம் பெயர்ந்த நாடுகளில் கடந்த கால வடுக்களுடனும் ரணங்களுடனும் ஆனால் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஆனந்தமாகவும் வாழ்கின்றோம் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. நமது குழந்தைகள் தொடர்பான கவலையின்றி வாழ்கின்றோம். ஏனெனில் அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பும் கல்வியையும் வாழ்க்கையையும் புலம் பெயர்ந்ததன் மூலம் வழங்கியிருக்கின்றோம் என்ற பெருமையும் நம்பிக்கையும் நமக்கு உண்டு.

இந்த நிலைமை இலங்கையில் வாழும் மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. இவர்களது வாழ்க்கையை அதன் தரத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களுடையது என்றால் மிகையல்ல. ஆனால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த புலம் பெயர் நாடுகளிலிருந்து கொண்டு வன்முறை அல்லது போருக்கு அதரவு அளிப்பது மனசாட்சி இல்லாத ஒரு செயற்பாடு. ஏனெனில் இந்த வன்முறை பாதையும் போரும் இந்த மனிதர்களின் உரிமைகளையும் சுநத்திரத்தையும் மேலும் மேலும் மறுக்கின்றமையும் மற்றும் குழந்தைகள் உடல் உள நோய்க்கு உள்ளாவதையுமே விளைவாக கிடைக்கின்ற யாதார்த்தமான ஒரு உண்மை. ஆகவே புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் வன்முறைக்கோ போருக்கோ ஆதரவளிக்காது இலங்கையில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதன் மூலம் இன பிரச்சனைக்கு தீர்வு ஒன்றினைக் காண உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் செயற்பமுடியும்.

புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை எழுத்துரிமை அதற்காக போராடும் உரிமைகளை குறைந்தளவிலாவது ;அனுபவிக்கின்றோம். நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பயன்படுத்தி அதன் வரையறைகளுக்குள் இருந்து நமது சமாதானத்தை அமைதியை தீர்வை நோக்கிய செயற்பாடுகளை முன்னேடுக்கலாம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இங்கு வாழும் மனிதர்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமது வாழ்வின் மீதான பொறுப்புக்களை குறைந்த அளவிலாவது நிறைவேற்றலாம். இதற்கு மாறாக வன்முறை பாதைக்கும் போருக்கும் ஆதரவு அளிப்பது நமது குற்ற உணர்வுகளும் பழி தீர்க்கும் செயற்பாடுளுமே. இது ஆரோக்கியமான வாழ்வல்ல. இவ்வாறன வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து சுய பிரக்ஞையில் சுயமாக செயற்படுவதன் மூலம் நமக்கும் இலங்கை வாழ் மனிதர்களுக்கும் வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி வழி காட்டலாம்.

நமது இன சாதிய மொழி மற்றும் இயக்க சார்புகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களாக ஒன்றினைந்து இலங்கையில் போரையும் வன்முறையையும் நிறுத்துவதற்கும் அங்கு வாழும் மனிதர்களின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் அமைதியான ஆனந்தமான வாழ்வுக்கும் நாம் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் செயற்படுவற்கான அழைப்பிதழ் இது.

நன்றி

இலங்கை மற்றும் புலம் பெயர்ந்து வாழும் சமாதானத்தை அமைதியை விரும்பும் மனிதர்கள் சார்பாக

- மீராபாரதி
http://www.keetru.com/literature/essays/meerabharathy_3.php

Sunday 8 June 2008

CALL TO ALL POLITICAL LEADERS TO WAKEUP TO SAVE THE COUNTRY.

Fax: (94 11) 2347721


07.06.2008


PRESS RELEASE


CALL TO ALL POLITICAL LEADERS TO WAKEUP TO SAVE THE COUNTRY.


The Tamil United Liberation Front very strongly condemns the LTTE for causing the death of 22 innocent civilians and also for causing grievous injuries to over sixty others by targeting a crowded bus – with a claymore mine. This is the third major incident in a week and the sixth in one month, taking a toll of 112 lives and injuring over 348 innocent people. How many more such incidents will take place God only knows? This is obviously the work of a fanatical group claiming to be waging a war to liberate the Tamils, little realising that the Tamils themselves need to be liberated from them. If these brutes do not tame themselves they will have to be tamed by others. This type of atrocious activities cannot be met with all the fire power the Government Forces have. It is not a conventional war that the LTTE is fighting. They are now cowardly engaged in gorilla warfare. Only the International Community can now rescue the country from the atrocities of the LTTE, but it is the Government’s responsibility to pave the way for it.


Under the present circumstances the International Community, Indiain particular can’t do anything other than silently and helplessly watching all what is happening. Only last week I appealed to the Government to come out with a reasonable proposal, acceptable to the International Community not out of fear for the LTTE , but to enable the International Community to step in and to tell the LTTE to stop all their brutal killings of the innocent civilians.


The unfortunate situation in our country is that the country is caught up in between a group that claims to be waging a war against the Government for the liberation of the Tamils and another group of ultra-nationalist claiming themselves as great patriots, trying to save the country from the former, little realising that a Patriot is not one who merely loves his country alone but one who not only loves his country but also its people as well. How can we expect the International Community to intervene when we are not prepared to accept our faults and jump at them when certain mistakes are pointed out by them. On such occasion it should be left to the Government to deal with them rather than others coming out with condemning statements. Only by doing so good-will can be maintained with all foreign countries. This applies to foreign agencies as well. The annoyance is often caused by unconcerned parties and the silence maintained by the
Diplomatic Community at times is understandable. The International Community has done a lot to keep the LTTE operating in their respective countries, under strict check and constant vigilance.


Everyone knows that the main demand of the LTTE is division of the country and that demand is serious enough for anyone to worry about. The ultra-nationalist, in particular, should appreciate the Tamil Leadership for openly opposing separation, defying the LTTE and at grave risk to their lives. They have declared that they will be satisfied with a reasonable and an acceptable solution within a United Sri Lanka but not within a UnitaryStateunder which there is no guarantee that whatever provisions made in a Unitary Constitution will remain in the Statute book for ever. The fate of the Soulbury Constitution should not be-fall on the proposed new constitution, leaving room for further agitation in the future. Whatever solution arrived at should be the last and final one that will strongly unite all sections of the people of Sri Lankato a common identity as Sri Lankans, to live in peace and amity, enjoying all rights equally with others.


This is the only way to bring back peace and save the country from further destructions of life and property. We have lost enough and cannot afford to lose anything more.
Another important factor that the ultra-nationalist have failed to take into consideration and should take as an Incentive to soften their stance, is the acceptance of Buddhism virtually by all Sri Lankans, as the state religion of Sri Lanka. The ultra-nationalist should therefore be magnanimous enough to give-in to the aspirations of the minorities who want to live in a United Sri Lanka as equals along with the others.


The ethnic problem has become so acute that everyone should do a complete re-thinking of their stand. This is the time for all political parties and various groups to shed their differences and to agree on a reasonable proposal that will satisfy the minorities and the International Community which if satisfied will certainly compel the LTTE to shun violence and to accept the solution recommended by them. They can, if necessary, impose several sanctions and curtail their activities in various countries including collection of funds and purchase of arms. The political parties should now get together and agree to a solution based either on the Oslo Declaration or by adopting the Indian Model if the terms "Federal" and "Unitary" are allergic to any section of the people.


I strongly urge His Excellency the President Mahinda Rajapakse, Leader of the SLFP and the Leader of the Opposition and President of the UNP Hon. Ranil Wickremesinghe to take the initiative without any delay to find a solution for the ethnic problem. The participation of the International Community cannot be construed as their interfering in the internal affairs of Sri Lanka. I am asking them only if satisfied, to recommend to the minorities as reasonable any solution that will emerge out of the initiative taken by these two leaders.


Everyone should realise that most of the people who die everyday are innocent bread-winners of poor families. Each one of us has a sacred duty to help to end the war and bring back much needed peace, for our people to live without fear and tension and to move about freely and fearlessly.


I thank the Sinhalese Civilians in the south and appreciate the tolerance hitherto shown by them inspite of the various provocations deliberately given by the LTTE. The reasons for enhancing their vicious activities recently are obvious and I strongly urge the Sinhalese to continue to show extreme tolerance and not to get provoked under any circumstances. I call upon all, be they Sinhalese, Tamils or Muslims to help the authorities to trace the people engaged in terrorist activities.


The Tamils and the Muslims of the Batticaloa District should learn from the Sinhalese in the South as to how they are showing extreme tolerance inspite of the numerous daily provocations given to them by the LTTE.


I appeal to all the residents in Batticaloa to maintain Peace and harmony and allow the others to live peacefully free from constant fear and tension.


V. Anandasangaree,
President – TULF.

Saturday 31 May 2008

நினைவு நிகழ்வு

மனித கௌரவத்திற்கான மன்றத்தின் இயக்குனரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆலோசகரும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின்
நினைவு நிகழ்வு

இடம்: கொன்வே மண்டபம், ரெட் லயன் சதுக்கம், லண்டன்
காலம்: ஞாயிறு, 13 யூலை 2008.
நேரம்: பிற்பகல் 12.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை
இலங்கையிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் பல சமூக சமய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கலந்து சிறப்பிப்பார்கள்.
அனைவரும் வருக !
மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
அழைப்பாளர்கள்:
மகேஸ்வரி வேலாயுதம் நினைவுக் குழு, லண்டன்

Wednesday 21 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க வேண்டுகோள்!

- தமிழ் சமாதான ஓன்றியம்

தமிழ் பேசும் மக்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களில் சமஷ்டி ரீதியிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வது எமது உரிமைப் போராட்டத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வாகும். சமஷ்டி முறையிலான தீர்வினை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு தீங்கிழைப்பதல்ல. அத்தகைய தீர்வினை அடைவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய அளவில் உதவ முடியும். எனவே சமஷ்டி முறையிலான தீர்வினை விரைவில் சாத்தியமாக்கவும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம விரைவில் சுபீட்சம் அடைவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பினைக் கோரும் இவ் வேண்டுகோளை சமாதானத்தை விரும்பும் மக்கள் சார்பாக முன் வைக்கிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை எற்று தமிழ் பேசும் மக்கள் செய்த அர்ப்பணிப்புக்களை தியாகங்களை மனதில் கொண்டு செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம். தமிழ் பேசும் மக்களின் வாழ்வை உத்தரவாதம் செய்யும் இவ்வேண்டுகோளை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோஷத்தை முன்வைத்து பாரிய அர்ப்பணிப்புக்களை செய்யும்படி கேட்டுக் கொண்டீர்கள் என்பதால் சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்வது எவ்வகையிலும் அவர்களின் தியாகங்களை அர்தமில்லாததாக மாற்றிவிடாது. மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் செய்யப்பட்ட அனைத்து அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் தமிழ்மக்களின் உரிமையை பெற்றுக் கொடுத்தனவாக அமையும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெற்று கௌரவுத்துடன் சமத்துவமாகவும் சமாதானமாகவும் வாழ்வதை உறுதி செய்வதே இலட்சியமாக இருப்பின் அதனை உறுதி செய்யும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நடைமுறையாக்க உதவுவது எப்படித் தவறாக முடியும்? பாலஸ்தீன விடுதலை இயக்கம் முன்னர் இஸ்ரேலின் இருப்பை நிராகரித்து சபதம் செய்து இன்று அதனை அங்கீகரித்து வாழ முற்படுவதால் பாலஸ்தீன மக்களின் நலனுக்கு குந்தகமாக செயல்பட்டவர்களாக மாட்டார்கள்.

சிங்கள பௌத்த பேரினவாத சத்திகள் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு எதிராக செயல்படுவார்கள் என்பதில் ஜயமில்லை. பெரும்பான்மை இனமக்களிடையே உள்ள தமிழர்களுக்கு நியாயமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஜனநாயக சத்திகளை வலிமைப்படுத்துவதன் மூலமே அவர்களைப் பலவீனப்படுத்த முடியும். இன்று தென்னிலங்கையில் பேரினவாத சத்திகள் சிறிய தொகையினராகவே உள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் எதிர்ப்புகளையும் மீறி தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான உரிமை கிடைப்பதற்கு பாரிய இழப்புகளையும் துயரங்களையும் அடைய வேண்டியுள்ளது. இனிவரும்காலங்களில் பேரினவாத சத்திகள் பெரும்பான்மை அரச அதிகாரம் கொண்டவர்களாக மாறினால் தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவது மேலும் கடினமானதாகும். எனவே இன்றுள்ள சூழ்நிலைகளை சாதகமானவையாகக் கருதி தமிழ்பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பாதுகாக்கும் சமஷ்டி முறையிலான தீர்வினைப் பெற முயல்வது அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

இப்பொழுதும் சமஷ்டி முறையிலான தீர்வு ஏற்படுவது மிகவும் சாத்தியமானதே. இதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் காத்திரமான பங்களிப்பு மட்டுமே விரைவில் நடைமுறைப்படுத்த முடியம். சமஷ்டி முறையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளும் தெளிவான மனப்பூர்வமான பகிரங்கமான அறிக்கையினை வெளியிடுவதன் மூலம் அவர்களால் இதற்கான பாதையை திறந்துவிட முடியும். சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்படுமாக இருந்தால் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவர பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக தெளிவாக தெரிவிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய துணிச்சல் மிக்க நடவடிக்கை தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக துரிதப்படுத்தும். போரினை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் அழிவை அவலங்களை தடுக்க உதவும். நல்லெண்ணம் கொண்ட மக்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

தமிழ் பேசும் மக்கள் மேலும் மேலும் படுகொலை செய்யப்படுவதை நிறுத்தவும் இதுவரை கால தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வீண் போகாமல் இருக்கவும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் இத்தகைய அறிக்கையை வெளிவிட வேண்டுமென்று சமாதானத்தை விரும்பும் மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். சமஷ்டி முறையிலான தீர்வை முன்வைப்பின் ஆயுத போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முடிவுக்கு கொண்டு வர பூரண ஆதரவு அளிப்போம் என்ற அறிவிப்பு சாதிக்கக் கூடிய மாற்றங்கள் எதனையும் எத்தகைய ஆயுத நடவடிக்கையும் சாதிக்க முடியாது. இலங்கை அரச படையினரால் தமிழ்பேசும் மக்கள் மேலும் துன்புறுத்தப் படுவதையே ஏனைய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நீடிக்கும்.

உங்கள் பங்களிப்பு முழுமையாக இருக்கும் பொழுது தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளை அனுபவிக்கக் கூடிய அதிகபட்ச அதிகார பரவலாக்கத்தை பெற்றுக் கொள்ளமுடியும என்ற உண்மையை அணைவரும் ஏற்றுக்கொள்வர்;. இதன் மூலம் தென்னிலங்கை இனவாத சத்திகளை மிகவும் பலவீனப்படுத்தப்படுவர். இது யுத்த நிறுத்தம் ஏற்படுவதை உத்தரவாதப் படுத்தும்.

தமிழ் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படாமையே தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெறத் தவறியமைக்கான காரணமென தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் குறிப்பிட்டுள்ளதனையும் கவனத்திற் கொண்டு செயல்படின் நியாயமான தீர்வினை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் சமஷ்டி ரீதியான தீர்விற்கு சாதகமான கருத்துக்களையே கொண்டுள்ளனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் சிங்கள மக்கள் அவர்களை அதனை வற்புறுத்தும் வகையிலும் அமையக் கூடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பு அனைத்து உலக நாடுகளாலும் இந்திய அரசியல் தலைவர்களாலும் பல்வேறு அரசியல் நிபுணர்களாலும் பெரிதும் வரவேற்க்கப்படும். இவர்களும் அதற்கான ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். இலங்கை அரசிற்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்க முடியும். எனவே சமஷ்டி அடிப்படையிலான திர்வினை ஏற்று ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பூரண ஆதரவு வழங்குவதாக மனப்பூர்வமான அறிக்கையினை தமிழீழ விடுதலைப் புலிகள் துணிவுடன் காலம் தாழ்த்தாது வெளிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். சமஷ்டி ரீதியான தீர்வினை விரைவில் நடைமுறைச் சாத்தியமாக்கும் வல்லமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உண்டு. சமாதானத்தை விரும்பும் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பான இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

சமஷ்டி ரீதியான நியாயமான அதிகார பகிர்வினை எமது பாரம்பரிய பிரதேசங்களில் ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்வது எவ்வையிலும் சரியானதே. அதன் மூலம் தென்னிலங்கை எங்கும் பரந்து வாழும் மலையக மக்கள் முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெரும்பான்மை இன மக்களுடன் சமாதானமாக வாழ்வதற்கான பாரிய கடமையினையும் சரிவர புரிந்தவர்களாவோம். இலங்கையில் சமூக அமைப்புகளின் தன்மை மக்களின் பரவலாக்கம் வரலாறு என்பன சமஷ்டி ரீதியான தீர்வை வலியுறுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பின் நிற்க்கக் கூடாது என்பதை தெளிவுறுத்தும். எமது இதுவரை கால அரசியல் போராட்டமும் இதனையே வலியுறுத்தி வந்துள்ளது.

இவர்கள் யார் எமக்கு அறிவுரை கூறுவதற்கு? இவர்களுக்கத் தான் எல்லாம் விளங்கும் போலும்! ஏமக்கத் தெரியாதா என்ன செய்ய வேண்டுமென்று? இவர்கள் சொல்லி நாம் ஏன் செய்ய வேண்டும்? நாம் எத்தனை ஆயிரம் உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம் எமக்குச் என்ன செய்ய வேண்டுமென்பதைச் சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை? சமஷ்டி தான் வேன்டுமென்றால் நாம் எப்பொழுதோ எடுத்திருக்க முடியும் போன்ற பல கேள்விகள் உங்கள் மத்தியில் எழ நியாயமுண்டு. இன்றைய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு பல்லாயிரம் தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடிய இத்தகைய அறிக்கையின் உடனடி அவசியத் தன்மை கருதி எமது கோரிக்கையை பரிசீலிப்பதை நிராகரிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இதனை முன்வைக்கிறோம்.

சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை ஏற்படுத்தக் கூடிய இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி விரைவில் சமாதான சூழ்நிலைகளை தோற்றுவிக்க தமிழீழ விடுதலைப் புலிகளால் முடியும். தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைக் பெறவும் சமாதானமும் போருக்கு முடிவும் ஏற்படுத்தவும் உங்கள் ஆக்க பூர்வமான பங்பளிப்பை வழங்குவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். மிகவிரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் அண்டைய தமிழ் நாட்டு மக்களைப் போல் எமது மக்களும் முன்னேற துயரங்களிலும் அழிவகளிலும் இருந்கு விடுபட ஆவன செய்வீர்கள் என நம்புகிறோம். இதற்கு சார்பாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிகவும் துணிகரமான நடவடிக்கைகளாகவே கருதப்படும். சமஷ்டி ரீதியான தீர்வின் மூலம் விரைவில் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை ஆதரித்து தெளிவான பகிரங்க அறிக்கையினை விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். தமிழ் பேசும் மக்களின் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் அர்த்தமுள்ளவையாக அவர்களின் எதிர்காலம் விரைவில் நம்பிக்கையுள்ளதாக சுபீட்சமானதாக மாற எமது கோரிக்கையை அக்கறையுடன் பரிசீலிக்குமாறு மறுபடியும் கேட்டுக் கொள்கிறோம்.

21/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com

Saturday 17 May 2008

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு எமது அஞ்சலி

- தமிழ் சமாதான ஒன்றியம்
உயிர்க் கொலைகளாலும் வன்முறையாலும் எமது மக்களின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடமுடியாது. கடந்த மூன்று சகாப்தத்திற்கு மேலாக உச்சமடைந்துள்ள ஆயுத கலாச்சாரமும் அழிவு அரசியலும் எமது மக்களின் வாழ்வை பல்வேறு தளங்களிலும் பல்வேறு பரிமாணங்களிலும் பின்னடைய வைத்துள்ளது. கடந்த கால, நிகழ் கால சமூக விளைவாக தீங்கு நிறைந்து நிற்கும் இந்த அழிவு அரசியல் வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி எமது மக்களின் குறைந்தபட்ச நம்பிக்கையான வாழ்வையும் சூறையாட தொடர்ந்தும் படுகொலைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டவிழ்த்து விடுவதை நமது மக்களின் உண்மையான நலனில் நின்று கண்டிக்க வேண்டி உள்ளதுடன் இச்செயல்பாடுகளை நிறுத்துவதற்கு எம்மாலான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ் சமூகத்திற்குள் தோன்றிய சகோதர படுகொலைகள் நமது மக்களின் உண்மையான விடுதலையையும் ஜக்கியத்தையும் வெற்றியையும் பெரிதும் பாதித்து சிதைத்து அடிப்படை வசதிகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் அல்லல் படும் சமூகமாக கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழர் தாயகமெங்கும் கைம்பெண்களையும் அனாதைகளையுமே விளைவுகளாக்கியுள்ளது.

தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் இந்த அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி உள்ளமை கொடூரமான செயலாகும். தமிழ் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

தொடரும் யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களின் நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்க முடியாது என்பதை முதனிலைப்படுத்தி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய பணியால் பல்வேறு அரசியல் சத்திகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்புகள் மதிக்கத்தக்கவை, மக்களால் நினைவு கூரத்தக்கவை.

துப்பாக்கிகளின் பாசிச அரசியலுக்கு அஞ்சாது துணிகரமாக செயலாற்றிய சமூகப்பற்றுள்ள மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதானது தமிழ் தேசியத்தின் வழிதவறிய அரசியலின் கோர முகத்தின் அடையாளமாக உள்ளது.

தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்திய இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? இதனைப் புரிந்தவர்கள் நமது சமூகத்தின் அவல நிலையை அலட்சியம் செய்து தமது காழ்ப்பு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கொலைவெறியினை அரங்கேற்றுவதையே வீரமாக விடுதலையாக விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும் அனைவரையும் கொலை செய்வதை விடுதலையின் தாகம் என்றால் சுடுகாடு மட்டுமே மிஞ்சும். இதே வழிமுறை இன்னும் தொடருமாயின் அனைத்து தமிழ் மக்களையும் விடுதலையின் தாகம் விழுங்கி மயான பூமியே மிச்சும்.

ஏன்றாவது ஒருநாள் எங்களின் ஒருவனது துப்பாக்கியே என்னை அமைதியாக்கிவிடும் என்று கூறியபடி துணிவுடன் நமது சமூகத்தின் அவலத்தை ஆவணப்படுத்திய மருத்துவத்துறை பேராசிரியை ராஜினி திரணகம அவர்களை பலியெடுத்த துப்பாக்கிகளே இப்போது மகேஸ்வரி வேலாயுதம் அவர்களையும் பலியெடுத்துள்ளது. அவரது உன்னத பணிக்கு அவரது உயிரைப் பறித்தெடுத்தமை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டும் சேவை செய்த மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு தமிழ் சமாதான ஒன்றியம் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களின் பிரிவால், வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத சொல்லொணா துயரத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமிழ் சமாதான ஒன்றியம் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கிறது.

மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் மக்களை நேசித்ததாலும் மக்களுக்காக அயராது பணி செய்ததாலுமே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழ் சமாதான ஒன்றியம் அவரது படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது. இந்த அவலமிகு அழிவை தடுத்து நிறுத்தும் தார்மீக கடமையும் உடனடிப் பொறுப்பும் நமது மக்களின் இயல்பு வாழ்க்கையை நேசிக்கும் அனைத்து சமூக சத்திகளுக்கும் உள்ளது. இப்படுகொலைக்கு காரணமான மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காத அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதற்கான சமூக, அரசியல் வேலைத் திட்டத்தினை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து உடனடியாக மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறது. தொடரும் யுத்தமும் தொடரும் படுகொலைகளும் நமது மக்களை மயானத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சத்திகளையும் தமக்கிடையிலான வேறுபாடுகளை முதன்மைப்படுத்தாது பொதுவான வேலைத்திட்டமொன்றில் செயல்பட விளையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கான விட்டுக் கொடுப்புகளுக்கு மனத்திடம் கொள்வதே மகேஸ்வரி வேலாயுதம் அவர்களுக்கு நம்முடைய உண்மையான நன்றி கூறலும் இறுதி அஞ்சலியும் ஆகும். மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் வீண்போகக் கூடாதென்ற உறுதியுடன் புதிய பாதையினை செப்பனிட்டு செயல்பட ஊக்கம் அளிக்கும்படி அனைத்துத் தமிழ் சமூக, அரசியல் அமைப்புகளிடமும் பொது மக்களிடமும் தமிழ் சமாதான ஒன்றியம் ஆதரவு கோருகிறது.
17/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com

Saturday 3 May 2008

எதிர் வரும் மாகாணசபைத்தேர்தலில் ஜனநாயகத்தைப் பேணுவோம்! தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துவோம்!!

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தல் தொடர்பாக கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது ஆழ்ந்த அக்கறையையும் தெளிவான நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டியுள்ளது.

ஏனெனில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாணச்சபைத்தேர்தல் கிழக்கு வாழ் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்கால வாழ்வுடன் தொடர்பு உற்று இருப்பதாலும் வேறு எந்தத்தேர்தலிலும் இல்லாத சமூக அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாலும் இத்தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை முக்கியமானதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தேர்தல் அங்கு வாழ்கின்ற பல்லினங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் சமாதானத்தையும் இயல்பு வாழ்வையும் தோற்றுவிக்கும் தேர்தலாக இத் தேர்தல் அமையவேண்டும்.

ஆனால் இத்தேர்தல் பிரச்சாரங்களில் வெளியிடப்படும் கருத்துக்களும், பிரச்சார உத்திகளும் இனங்கள் மத்தியில் பிளவுகளையும், விரிசல்களையுமே பெறுபேறாகத் தரும் நிலைமைகளே காணப்படுகின்றன. சில வாரங்களுக்கு முன் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தல்கள் அங்கு ஓர் ஜனநாயக இடைவெளியை உருவாக்குவதற்கான புறச் சூழலைத் தந்தது என்பது ஏதோ உண்மைதான். புலிகளின் கொடிய வன்முறைகளிலிருந்து மக்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான அவகாசம் கிடைத்திருப்பதும் முன்னிருந்ததை விட முன்னேற்றகரமானதுதான். ஆனால் கிடைக்கப்பெற்ற இந்த ஜனநாயக இடைவெளியை நிரப்ப முயற்சிக்கும் அரசியல் சக்திகள் குறித்தே எமது கவனங்கள் திரும்பவேண்டும்.

ஆயுதங்கள் இன்னமும் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ளதாகக் கூறி தேர்தலில் ஈடுபட்டுள்ள சில கட்சிகள் இன்னமும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. கடந்த கால அனுபவங்களிலிருந்து மக்கள் இன்னமும் விடுபடவில்லை. கிழக்கு மாகாணம் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற விருப்புடனும் கூட அப் பிரதேசம் சட்ட விரோத ஆயுதங்களின் இருப்பிடமாக இருக்கக்கூடாது என்பதும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

மூன்று இன மக்களும் இணைந்து வாழும் அப் பிரதேசம் ஜனநாயகத்தின் மாதிரியாக அமைதல் வேண்டும். ஆனால் தற்போது இடம்பெற்று வரும் பிரச்சாரங்கள் முதலமைச்சர் முஸ்லிமா தமிழரா ஏன்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மாற்றப்படும் அபாயம் காணப்படுகிறது. இனங்கள் மத்தியிலே பிளவுகளை மேலும் கூர்மைப்படுத்துவதற்கு இனவாத சக்திகள் திட்டமிட்டுச் செயற்பட்டுவரும் இக் காலகட்டத்தில் இச் சூழ்ச்சிகளுக்கு மக்கள் இரையாகாமல் தடுக்கப்பட வேண்டும்.

புலிப்பாஸிஸ இயக்கத்திற்குள் எழுந்த உள் அதிகாரப் போட்டியை பாவித்து பிரபாகரன் அணியை கிழக்கின் ஆதிக்கத்திலிருந்து தனக்கு சாதகமாக பலவீனமடையச்செய்தது அரசாங்கம். ஆனால் கிழக்கு மக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் ஜனநாயக சூழலையும் வழங்காது இராணுவ பகைப்புலத்தை வைத்துக்கொண்டு கிழக்கு மக்களுக்கு நம்பிக்கையான எந்தவித சமிக்ஞையையும் ஏற்படுத்தாது சூட்டோடு சூடாக கிழக்கு மாகாணச்சபைத் தேர்தலை நடாத்த முன்வந்திருப்பது நம்பிக்கையளிப்பதாக இல்லை என்பதை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இருந்தும் ஏற்கெனவே இருந்த நிலமைகளை விட தேர்தல் நடந்து நிலைமைகள் மாறி அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு புதிய சூழல் வரக்கூடும் என்ற நம்பிக்கையில் கிழக்கிலங்கை மக்கள் வாழ வேண்டியுள்ளது.

கிழக்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடம் இத்தேர்தல் தொடர்பாக கருத்தறிந்தபோது அவர்களது மனஉணர்வுகளிலிருந்து வெளிப்படுகின்ற கருத்துகள் மிகப் பாதகமான சமூக அரசியல் விளைவுகளை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தோற்றுவிக்க காலாக இத்தேர்தல் அமைந்து விடுமோ என்ற அவர்களின் அச்சத்தையே குறிகாட்டி நிற்கின்றன. தேசிய இனப்பிரச்சினை உக்கிரம் அடைந்த காலத்திலிருந்து கிழக்கு வாழ் மக்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத துன்பத்தையும் இழப்பையும் சந்தித்து வந்திருக்கின்றனர். இன்னும் வருகின்றனர். உயிரழிவு உடமையழிவு என அவர்கள் அதிக விலையை தமது வாழ்வைப் பாதுகாக்க செலுத்தியிருக்கின்றனர்.

நீண்ட காலமாக கிழக்கு மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளாக அரசின் சிங்கள குடியேற்றம் இராணுவமயமாக்கம் ஆயுத அடக்குமுறை மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையேயான முரண்பாடுகள் மோசமாகி வருதல் போன்ற பிரச்சினைகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படி நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவது அவசியமாகும். இவற்றிற்கு நீண்ட கால நோக்கில் அரசியல் தீர்வொன்று காணப்படும் பொழுது தான் கிழக்கு மக்களின் வாழ்வில் நிரந்தர அமைதியையும் சமாதானத்தையம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் கொண்டுவர முடியும். தமிழ் முஸ்லிம் மக்களின் இதயபூர்வமான எதிர்பார்ப்பும் இதுதான்.

இத்தேர்தலினால் மாகாணசபை கிழக்கில் இயங்கத்தொடங்குவது ஒருபக்கமிருக்க நாடளாவிய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் நீண்டகால நோக்கிலான அரசியல் தீர்வொன்றை அடைவதற்குமான அரசியல் நடைமுறையொன்று சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கிழக்கு வாழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளைச் சிதைத்து மேலும் அடக்கு முறையையும் ஜனநாயக மறுப்பிற்கான சூழலையும் ஆயுதம் தரித்த தரப்போரின் கைகளை மேலோங்கச் செய்யவும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனப்பகைமையையும் போட்டா போட்டியையும் மேலும் கொழுந்து விட்டெரியச் செய்யவும் இத்தேர்தல் வழிவகுக்கும் அபாயம் காணப்படுவது குறித்து மக்களை எச்சரிக்க விரும்புகிறோம். மக்களை வுpழிப்போடு செயற்படும்படும்படி வேண்டுகிறோம்.

தேசத்தின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டும், நாட்டில் காணப்படும் அரசியல் போக்கினைக் கவனத்தில் கொண்டும் பார்க்கையில் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள் மிகவும் பலமான ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டுவதன் மூலமே தீவிரமடைந்துவரும் சிங்கள அதி தீவிர தேசியவாதத்திற்கு பலமான சவாலாக செயற்பட முடியும.; இவ்வகையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே கட்டப்படக்கூடிய பலமான முன்னணியொன்று சகல சிறுபான்மையினரையும் ஒன்று கூட்டி இலங்கை அரசிடம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை கோரி நிற்கும் முயற்சியில் விரைவில் இறங்க வேண்டும். அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் ஓர் பலமான நிர்வாகம் தோற்றுவிக்கப்படுவது அவசியமானதே. அது தமிழ்-முஸ்லிம் இனங்களின் பலமான இணக்கத்தின் அடிப்படையிலான நிர்வாகமாக அமையுமாயின் இலங்கை அரசியலில் பல தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாக அமையும்.
---------------------------------------------------------------------------------------------
தமிழ் சமாதான ஒன்றியம் (Tamil Forum for Peace- TFP)
இலங்கை ஜனநாயக ஒன்றியம் (Sri Lanka Democracy Forum - SLDF)
இலங்கை இஸ்லாமிய அமைப்பு (Sri Lanka Islamic Forum- SLIF-UK)
தலித் மேம்பாட்டு முன்னணி(Social Development Organisation of Sri Lankan Dalits -SDOSLD) ஆகிய புலம் பெயர் நாட்டு ஸ்தாபனங்களால் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


- தமிழ் சமாதான ஒன்றியம்
04/05/2008

Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com

Wednesday 6 February 2008

கிழக்கு மாகாண தேர்தல் தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு மைல்கல்!

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இன உரிமைப் போராட்டத்தில் முதுகெலும்பாக நின்று போராடியவர்கள் கிழக்கு மாகாண மக்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. தனிமனித நலன்களை மட்டும் முதன்மைப் படுத்தும் வழி மாறிய அப்போராட்டத்திலிருந்து தம்மை விடுவித்து சுதாகரித்துக் கொண்ட மக்கள் மீண்டும் அதே வழிமுறைகளை நாட விரும்ப மாட்டார்கள் என்பது உறுதி.


பல்வேறு மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் பன்முக அரசியலை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உறுதியுடன் நிலைநாட்டி நமது கருத்துக்களின் நியாயத் தன்மையை ஜனநாயக முறைகளினூடான செயல்பாடுகளினால் மக்கள் ஏற்றுக் கொள்ள பிரயத்தனம் செய்வதன் மூலமே நாம் கடந்து வந்த கறை படிந்த துயரமிக்க படிகளை நீக்கி எதிர்காலத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.


அழிவுகளுக்கு மட்டுமே வழி கோலும் ஏகபோக பிரதிநிதித்துவத்தை பயமுறுத்தல் பலாத்காரம் படுகொலைகள் போன்ற வழிமுறைகளினூடாக உருவாக்க முனையும் செயல்வடிவங்களே தமிழ் பேசும் மக்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றினை எதிர்க்கும் மனோபாவங்களை வலிந்து உறுதியுடன கடைப்பிடிப்பது இன்று நாம் செய்ய வேண்டிய தியாகங்களில் முதன்மையானதாகும். இதற்க்கான பக்குவமும் உறுதியும் இல்லாத இடத்து எமது ஏனைய தியாகங்கள் அனைத்தும் பயனற்றவையாகின்றன. இது பொதுநலத்தினை பின்தள்ளி சுயநல முனைப்புகள் அழிவுகளை ஏற்படுத்தும் உணர்வுகளைத் தூண்டி தவறான செய்கைகளுக்கு உரமிடுவதை தெளிவாக காண முடியும்.


தமிழ் பேசும் மக்களை பிளவு படுத்தி பலவீனப்படுத்துவது, அவர்கள் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதமாக கருதும் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களை சிங்கள மயப்படுத்தி அவர்களை நிர்க்கதியாக்குவது, பௌத்த சிங்கள சின்னங்களை நிறுவி பெரும்பான்மை மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுவது, எமது பிரதேசங்களின் பொருளாதார மையங்களிலிருந்து எமது மக்களை வெளியேற்றி தமது கட்டுப்பாட்டை உறுதி செய்வது, என பலதரப்பட்ட முயற்சிகளை சிங்கள அரசியல் சத்திகள் கூட்டாக முன்னெடுக்கும் போது எமது ஒற்றுமையைப் பேணும் முயற்சிகளை ஊக்குவிப்பதே தலையாய கடமையென புரிதல் கஷ்டமானதல்ல. எனவே எமது அரசியல் செயற்பாடுகள் ஒற்றுமைக்கு எதிர்வினையான உணர்வுகளை ஏற்படுத்தா வண்ணம் அமைவது அவசியமானதாகும்.


பேரினவாத சக்திகள் தமிழ் பேசும் மக்களை பிரித்து பலவீனப் படுத்துவதில் வெற்றி பெற்றனர். இந்த பேரினவாத சத்திகளுக்கு உறுதுணையாகும் வகையில் உணர்வு ரீதியாகவும் தமிழ் பேசும் மக்களை துண்டாடுவதாக எமது செய்கைகள் அமையக் கூடாது.


துமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு ஆரம்ப காலங்களில் தமக்கு மற்றைய தமிழ் அரசியல் அமைப்புகள் உதவி புரியவில்லை என்ற மனகசப்புகள் இருக்க நியாயமுண்டு. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் பாகமாக இருந்தவர்கள் என்ற வகையில் உங்களுடன் உறவு கொள்வதில் அவர்களுக்கு இருக்கக் கூடிய சங்கடங்களிலும் நியாயமிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய சமூகம் ஒன்றை உருவாக்குவதில் புதிய அணுகுமுறைகள் தேவை என்பதால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படும் நிகழ்வுகளுக்கு அத்திவாரமிடுதல் அவசியமாகும்.


கிழக்கு மாகாண உள்ளுராட்சித் தேர்தலில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மறுதலிப்பது எமது தப்பெண்ணங்களையும் நம்பிக்கையின்மையையுமே மையமாக கொண்டிருக்கும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மற்றவரின் ஜனநாயக உரிமையை மதிக்கும் பண்பாட்டினை முதன்மைப்படுத்துவது தேர்தலில் நாம் அடையும் முதலாவது வெற்றியாக அமையும்.


கிழக்கு மாகாண மக்களுக்கு மட்டும் அல்லாமல் வடக்கு மாகாண மக்களுக்கும் அரசியல் பண்பாடுகளை எடுத்துக்காட்டும் மைல்கல்லாக இந்த தேர்தல் பரிணமிக்க முடியும். அனைத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் நடைமுறைகளிலும் பன்முக அரசியல் பற்றிய சரியான சிந்தனை முறைகளை இந்த தேர்தலில் நடைமுறைகளின் மூலம் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் கொணடுவர முடியும்.


இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எமது மக்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வல்லமை கிழக்கு மாகாண மக்களுக்கு நிறையவே உண்டு. அனைத்து தமிழ்பேசும் மக்களின் நலன்களில் அக்கறை உள்ள எவரும் இந்த தேர்தலின் மூலம் சாதிக்க வேண்டியதென்ன என்ற எமது கருத்தை புறம் தள்ள மாட்டார்கள் என்று நம்புகிறோம்.


தேர்தல் முடிவில் கிழக்கு மாகாண மக்களின் இன்னல்களைப் போக்கும் வகையிலான ஒற்றுமையான செயல்பாடுகளுக்கு இத்தேர்தல் களம் அமைத்துத் தர வேண்டுமேயன்றி எமக்கிடையிலான வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தி மேலும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்க இடமளிக்கக் கூடாது. இடம்பெயர்ந்து அல்லலுறும் எமது மக்களின் மீள்குடியமர்வுக்கும் புணர்வாழ்வுக்கும் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகத்துடன் செயல்படும் சூழலை தோற்றுவிப்பதில் வெற்றி காண்போம்.


பயணம் போகும் பாதை சரிவர செப்பனிடப்படாத விடத்து பதவிகள் பாவங்களைப் புரியவே துணையாக இருக்கும் என்பது எமது கடந்த வரலாறு. இதனை மாற்றியமைக்கும் நிகழ்வுகளே எமது மக்களின் எதிர்பார்ப்பும் ஆதங்கமும் ஆகும். கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் புதிய நிகழ்காலமொன்றை தோற்றுவித்து அமைதியையும் சமாதானத்தையும் தோற்றுவிக்கும் எமது பயணத்தின் ஒரு மைல்கல்லாக இத்தேர்தலை மாற்றுவீர்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
- தமிழ் சமாதான ஒன்றியம்
06/02/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com

Monday 28 January 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் ஆதரவாளர்களுக்கு….

இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வும், சமாதானமும் அமைதியும் நிலவும் போரற்ற சூழலில் சகலரும் வாழும் ஒரு நிலையும், எப்போது வரும் என்று நீங்களும் எதிர்பார்ப்பீர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே அவற்றை அடைவதற்கு உதவும் முகமாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது பயனளிக்குமென நம்புகிறோம்.

தாயகத்தில் வாழும் எமது மக்கள் உயிருடன் வாழ்ந்து, உழைத்து, போரற்ற சூழலில், சுயகௌரவத்துடன், தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக நேசித்து வளர்த்து, அவர்கள் வளர்ச்சியில் மனநிறைவெய்த சமாதானமும் நியாயமுமான தீர்வும், போருக்கான முடிவும் ஏற்பட நீங்கள் உதவ முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைவரும் சரியான வழிமுறைகளுக்கு ஒத்துழைப்போமானால் காலக் கிரமத்தில் இந்த இலக்குகளை அடைவது இலகுவாக இருக்குமென நாம் நம்புகிறோம். கடந்த முப்பது வருட போரினால் எமது மக்கள் அடைந்த துன்பங்களும் - துயரங்களும் - இன்னல்களும் - இழப்புகளும், இன்னும் ஒரு வருடமேனும் தொடரக் கூடாதென்பதே எமது பேரவாவாகும். அளவிலா அன்புடன் தாயக மக்களை நேசிக்கும் உங்கள் உள்ளம், உங்களைப் போலவே அவர்களும் வாழ விரும்புவதை, ஏங்குவதை உணர்ந்து கொள்ள ஒரு கணம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமக்கு நியாயமான தீர்வு வர வேண்டுமெனில் எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை எதிர் தரப்பு முன் வைக்க வேண்டுமென்பது எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எமது போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அதனை ஊக்குவிப்பதாக - அவர்கள் அதனை முன் வைப்பதை இலகுவாக்குவதாக இருக்க வேண்டும். எமது சாம - பேத - தான - தண்ட போராட்ட வழிமுறைகள் அனைத்தும் எதிர் தரப்பின் செயல்பாட்டை இலகுவாக்குவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய தீர்வு முன்வைக்கப்படுவது சாத்தியமாகும். எமது போராட்டமும் வெற்றி பெறும். மாறாக எமது நடைமுறைகள் அனைத்தும் அவர்கள் நியாயமான தீர்வொன்றை முன்வைப்பதை தோற்கடிக்கும் செயல்முறைகளாக இருக்குமெனில் நாம் தோல்வியடைவதும் தவிர்க்க முடியாததாகும். அத்தகைய போராட்ட வழிமுறைகள் எமது மக்களின் நிகழ்கால எதிர்கால நல்வாழ்வை நாசமாக்குவதின்றி வேறு எதனையும் சாதிக்க போவதில்லை.

பொதுவாக, அனைவருக்கும் இயல்பாக தோன்றும் உணர்வுகளைப் போலவே நாமும் எமது நலன்கள், எமது உரிமைகள், எமது பாதுகாப்பு என்று மட்டுமே உணர்ச்சிவசப்பட்டுக் கொள்வதால், எமது பக்க கோரிக்கைகளின் நியாயங்களும், அதனை வெளிப்படுத்தும் முறைகளை நியாயப்படுத்தும் தன்மையுமே எமது சிந்தனையில் மேலோங்கி இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எமது ஒரு பக்கப்பார்வை எமது உணர்வுகளைத் திரித்து, எமது சிந்தனையும் செய்கைகளும் எம்மை அறியாமலே இயல்பாக மாற்றமடைந்து, நாம் தவறிழைப்பதை இலகுவாக்கும். அதனை நியாயப்படுத்துவதை இன்னும் உறுதியாக்கும். பிரச்சார ஊடகங்கள் ஏற்படுத்தும் உணர்வலைகள் சாத்தியமான மாற்று அணுகுமுறைகள் பற்றி சிந்திப்பதை தவிர்த்துவிடும்.

எமது உரிமை, எமது நலன், எமது பாதுகாப்பு என்ற பார்வை தேவையெனினும், அதற்குள்ளேயே நம்மைக் குறுக்கிக் கொள்வதால் எதிர்தரப்பு தனது நலன்கள், தனது உரிமைகள், தனது பாதுகாப்பு பற்றி முன்வைக்கும் நியாயங்களையும் அதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அறியவும், அவர்களை எமக்கு சாதகமான நியாயமான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் நகர்த்துவது எப்படி என்று ஆராயவும் தவறி விடுகிறோம்.

அவர்கள் பக்கமுள்ள நியாயமான வாதங்களை புரிவதும் அதற்கான உத்தரவாதங்களை வழங்குவதும், நியாயமான தீர்வினை அவர்கள் முன்வைக்கக் கூடிய கவர்ச்சியுள்ள பொருளாக மாற்றுவதும் எமது கடமையாகும். இதனை நாம் செய்ய இயலாத பட்சத்தில் இருசாராரும் ஏற்றக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை.

இலங்கை அரசு நியாயமான தீர்வினை முன்வைக்க சிங்கள இனவாத சத்திகளின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க உதவும் வகையில் நாம் மேற்கொண்ட செயல்முறைகள் எவை?

விடுதலைப்புலிகளின் பெரும்பாலான செயல்முறைகள் பேரினவாத சத்திகளை தூண்டிவிடுவதையே சாதித்துள்ளன. அவர்கள் கக்கும் விஷமே எமது மக்களுக்கு விமோசனம் தரும் என்றும், அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் அழிவுகளே எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்ற வகையிலுமே செயல்படுகிறோம். எமது அழிவுப் பாதையை நாமே தெரிவு செய்து அதுவே எமது குறிக்கோளை அடைவதற்கான வழியென அனைத்து மக்களையும் அதனை ஏற்கும் படி பலாத்கார திணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம்.

சமாதானம் வரவேண்டுமெனில் முன்வைக்கப்படும் தீர்வு நியாயமான தீர்வு என்ற உணர்வு அனைத்து தரப்பினருக்கும் வரவேண்டும். அதனை யதார்த்தமாக்கும் வகையில் எமது பேச்சுக்கள், செயல்முறைகள் அனைத்தும் அமைய வேண்டும். அனைத்தையும் வன்முறைகள் மூலமே சாதிக்கலாம் என்று செயல்பட்டால், மனித அழிவை மட்டுமே நாம் நேசித்தவர்களாவோம்.

ஆயுத வலிமையால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி செயல்படுவது ஆயுத போட்டியினை வளர்த்து அதிகமான அழிவினையே ஏற்படுத்தும். ஆயுதங்களின் ஆதிக்கம் மனித நேயங்களை புறக்கணித்து, யதார்த்த நிலமைகளால் குறிக்கோளை மறந்து, தனிமனித உணர்வுகளின் கொந்தளிப்புகளுக்கு விடுதலை தேடும் விபரீத வேட்டை விளையாட்டாக போராட்ட வடிவங்களை மாற்றும்.

பொதுவாகவே நீ அவனுடைய நிலையில் இருந்து பார்த்தால் தான் உனக்குத் தெரியும் என்று கூறுவார்கள். (You put yourself in their shoes) . தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமையுள்ள தீர்வை முன்வைக்க விரும்பும் சிங்கள அரசியல் சக்திகளின் நிலையிலிருந்து யோசித்தால், எமது செய்கைகளின் மூலம் நாம் அவர்கள் செயலை இலகுவாக்கிறோமா என்று புரியும். வேலியே பயிரை மேயும் கதை எமக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொள்வோம்.

எமது போராட்டம், இலங்கையில் காணப்பட்ட ஜனநாயக அரசியல் முறையில் இருக்கும் குறைகளை நீக்கி, அக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே அல்லாமல். ஏற்கனவே காணப்பட்ட ஜனநாயக உரிமைகளையும் நீக்கி மன்னர் ஆட்சியையோ சர்வாதிகாரத் தன்மை கொண்ட அல்லது அராஜகத் தன்மை கொண்ட ஆட்சியையோ நிறுவுவதற்கு உதவுவதாக இருக்கக் கூடாது. எமது போராட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவது என்ற குறிக்கோள் மனதிலிருக்குமானால் சரியான வழிமுறைகள் இலகுவில் விளங்கும்.

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதே உங்கள் சிந்தனைக்கு சரியாக இருப்பினும், அதை அடைவதற்கான அணுகுமுறைகள் குறித்து தவறுகளை சுட்டிக்காட்டுவதும், சுதந்திரமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறுவதும் அவசியமாகாதா? தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தடியெடுத்தவன் எல்லாம் தலைவனாகலாம் என்றிருக்கையில் அந்த வழியில் போனால் சரியான பாதையால் போக முடியுமா?

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் உரிமைப் போராட்டங்கள் குறைந்த பட்சம் மூன்று கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்:

1. உரிமைக்கு போராடும் சமூகத்தின் அர்ப்பணிப்பு

2. அப்போராட்டத்தின் உள்ளடக்கத்தினதும், வழிமுறைகளினதும் நியாயமுள்ள
தன்மை

3. நியாயமாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செவிமடுக்கும் நேர்மை

இதில் முதலாவது அம்சத்தில், இதுவரை கால எமது மக்களின் இழப்புகள், அழிவுகள், தியாகங்கள், துரோகங்கள் யாவும் தேவைக்கும் மிக அதிகமாகவே சமூகத்தின் உரிமைக்காக போராடும் எமது அர்ப்பணிப்பை உலகிற்கு காட்டியள்ளன. இனிமேலும் அவற்றிற்கு எந்தவித தேவையுமில்லை.

மற்றைய இரண்டு அம்சங்களிலும் எமது பங்களிப்பு உலக அரங்கில் மிக மோசமாக கணிக்கப்படுவது தெட்டத்தெளிவு. இவற்றில் கணிசமான மாற்றங்கள் வரும் வரையில் எமது நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறது. உங்களின் நல்வாக்கும் நற்செய்கையும் நன்மை விளைவிக்கும் என்று உறுதியுடன் நம்பலாம். நீங்கள் மனதில் எதை நினைத்து செயல்பட்டாலும் எவரும் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ்வு நாசமாக்கப்பட வேண்டும் என்று நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.

தனி மனிதனின் உரிமையை மதிப்பது இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு பங்கம் விளைவிக்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும். மாறாக மனிதனின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மதிக்கும் இனமாக நாம் பெருமையடன் மிளிர முடியும்.

இலங்கையில் சமாதானமும் நியாயமான ஓர் அரசியல் தீர்வும் போருக்கு முடிவும் வர உங்களாலும் நிட்சயம் உதவ முடியும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை கொண்டுவர முயலும் அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் உங்கள் பேச்சுக்கள் செயல்களை அமைத்து உங்கள் பங்களிப்பை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமே உங்கள் கருத்துக்களும் மதிப்புடன் செவிமடுக்கப்படும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் எமது நாட்டு மக்கள் அனைவரதும் உயிருக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் வழங்குவதாக அமைய வேண்டும். இதன் மூலமே, பேரினவாத அரசியல் சக்திகளின் அழிவுகளை நாம் உலகஅரங்கில் அம்பலப்படுத்த முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நியாயமான அளவு பெற முடியும். எமது மக்களின் அழிவுகளைப் பெருக்கி, அயலவர்களாக வாழ வேண்டிய சகோதர இனங்களின் உறவுகளைக் கெடுத்து, சொல்லொணாத் துயரங்களை எமது சொந்த மக்கள் மேல் சுமத்தி, எந்தவொரு உயிருக்கும் உத்தரவாதமில்லாததொரு நிலையைத் தோற்றுவித்ததைத்தவிர எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் இதுவரை சாதித்ததென்ன என ஒரு முறை சிந்தித்துப்பாருங்கள். இந்த நிலை இன்னும் எத்தனை வருடங்கள் தொடரும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

தமிழ் மக்கள் மனித உரிமைகளை மதிப்பதன் மூலமே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த முடியும். இன்னொருவருடைய கருத்தைக் கவனத்தில் கொள்வதன் மூலம் நாங்கள் ஒன்றையும் இழக்கப் போவதில்லை. இனப்பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாக நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. சமாதானம் மூலமான தீர்வொன்றே எங்களுடைய தெரிவு எனின், எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் சமாதானம் மூலமான தீர்வொன்றை தூண்டுவதாக அமைய வேண்டும். அதற்கு, உங்களுடைய ஆதரவில் எந்த வொரு உயிரும் இனிமேல் இழக்கப்படக் கூடாது என்பதையே அகரமாக கொள்ளவேண்டும்.

மனித நேயம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்தி இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்த உங்களால் இன்னும் காத்திரமாக பங்காற்ற முடியும்.

விடுதலைப் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துக்கள் விசாலமடையும் போது தமிழ் மக்கள் நிச்சயமாக பெருமைப்பட முடியும்.


தமிழ் சமாதான ஒன்றியம்

28/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com

Thursday 24 January 2008

சர்வ கட்சிக்குழு தலைவர் பேராசிரியர் திஸ்ச விதாரன ஜனாதிபதிக்கு கையளித்த ஆலோசனைகள்



APRC Proposals to President

The following are the proposals handed over to President Mahinda Rajapaksa by the All Party Representative Committee (APRC) yesterday, on fully implementing relevant provisions in the present Constitution, in order to achieve maximum and effective devolution of powers to the provinces in the short term


ACTION TO BE TAKEN BY THE PRESIDENT TO FULLY IMPLEMENT RELEVANT PROVISIONS OF THE PRESENT CONSTITUTION AS A PRELUDE TO THE APRC PROPOSALS

1. Introduction

1.1 The APRC was mandated by the President to prepare a set of proposals that would be the basis for a solution to the national question. After 63 sittings over a period of 1½ years the consensus document is being finalised and it should be possible to hand it over to the President in the very near future. The outcome would be a basis for appropriate constitutional arrangements. Implementation of this would of course require amendment of the present Constitution, and in respect of some Articles, approval by the People at a referendum. This would of course take time, once a favourable climate is established.

1.2 Under the circumstances, the APRC taking into consideration its own proposals, has identified a course of action to achieve maximum and effective devolution of powers to the provinces in the short term. The emphasis would be on meeting the aspirations of the Tamil speaking peoples, especially in the North and East. This would be done within the framework of the present Constitution, that is, the 1978 Constitution. The course of action proposed by the APRC would be implementable with immediate effect, and envisages an interim arrangement pending the restoration of democratically elected Provincial Councils in the North and East.

1.3 The 13th Amendment to the 1978 Constitution was enacted following the Indo Sri Lanka Agreement of July 1987. It resulted in the setting up of Provincial Councils throughout Sri Lanka and it devolved power to the Provinces under the unitary Constitution. The powers devolved fall under a Provincial List and a Concurrent List. All other powers were reserved for the Centre through a Reserved List. Further, any subject or function not included in any of the three Lists will also be deemed to be a subject or function in the Reserved List.

1.4 Implementation of subjects and functions devolved on the Provinces through the Concurrent List has not taken place at all due to the fact most of these subjects and functions were retained by the Centre as if they also belonged to the Reserved List.

2. Steps necessary to permit Maximum Devolution of Powers to Provinces under the 13th Amendment

2.1 The Government should endeavour to implement the 13th Amendment to the Constitution in respect of legislative, executive and administrative powers, overcoming existing shortcomings.

2.2 Adequate funds should be provided by the Government to facilitate effective functioning of the Provincial Councils.

2.2.1 The Centre should hereinafter route all finances in respect of special projects undertaken by the Centre in the Provinces, if they are on subjects under the purview of the Provinces, through the respective Provincial Administrations.

3. Special Arrangements necessary to permit Maximum Devolution of Powers to the Northern and Eastern Provinces under the 13th Amendment

3.1 The APRC is of the view that conditions in the Eastern Province are conducive to holding elections to the Provincial Council and that elections should be held immediately.

3.2 Conditions in the Northern Province are far from being peaceful. A free and fair election in the North will not be possible in the near future. Hence an alternative arrangement is required in the Northern Province to enable the people of that Province to enjoy the fruits of devolution.

3.3 As it is not possible to hold elections in the North, the President could make appropriate order to establish an Interim Council for the Northern Province in terms of the Constitution.

3.4 The Interim Council of a Province will aid and advise the Governor in the exercise of his executive powers, and will function until Provincial Council elections are held in that Province.

3.4.1 The Interim Council should reflect the ethnic character of that Province.

3.4.2 It is proposed that the Interim Council for a Province should consist of individuals who have political experience and an abiding interest in the development of the Province and in its people and be acceptable to the people of the Province. A person to qualify for appointment as a member of an Interim Council should have a thorough knowledge of the particular Province.

4. Implementation of the Official Languages Provision of the Constitution

4.1 The Government should take immediate steps to ensure that Parliament enacts laws to provide for the full implementation of Chapter IV of the Constitution on Language.

4.2 There are many contexts in which remedial measures will assume an administrative, rather than a legislative, character.

The following are instances of measures which should be strenuously accelerated and implemented by the Government.

(a) recruitment of Tamil speaking police officers in sufficient numbers to enable Tamil speaking members of the public, not only in the North and East, but in the country as a whole, to transact business in their own language in police stations;

(b) the taking of all steps, including recruitment of staff and procurement of equipment to enable Tamil speaking members of the public to deal with Ministries, Government Departments, statutory corporations and all other public bodies in their own language;

(c) the regular holding of, and streamlining of procedures for, mobile "clinics" where officials fluent in the Tamil language will engage problem solving on the spot;

(d) the provision of interpreters, translators and other relevant facilities in all courts of law, so that the needs of members of provincial minority communities are catered fully with regard to all aspects of the administration of justice;

(e) The Sinhala minorities in the North and East suffer from disadvantages similar to those affecting Tamil speaking peoples as mentioned above. Suitable steps should be taken to address them along the same lines.

The All Party Representative Committee (APRC) comprised:
1. Sri Lanka Freedom Party
2. United National Party (D)
3. Jathika Hela Urumaya
4. Ceylon Workers Congress
5. Sri Lanka Muslim Congress
6. All Ceylon Muslim Congress
7. Mahajana Eksath Peramuna
8. National Unity Alliance
9. Up-country People’s Front
10. Communist Party of Sri Lanka
11. Eelam People’s Democratic Party
12. National Congress
13. Western People’s Front
14. Lanka Sama Samaja Party

Wednesday 23 January 2008

ஜனாதிபதியிடம் சர்வ கட்சிக்குழுவின் ஆலோசனைக் கையளிப்பு நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆற்றிய உரை


23.01.2008.

Speech made by President TULF at the handing over ceremony of the Proposal by Hon. Tissa Vitharana to His Excellency the President Mr. Mahinda Rajapakse.

Your Excellency the President, Hon. Ministers, Hon. Members of Parliament, Leaders of Political Parties, Ladies and Gentlemen.

It may be a surprise to all of you to see me participating in today’s ceremony held to hand over an interim report of the APRC to His Excellency the President by Hon. Tissa Vitharana, I owe an explanation to the People of this country, to the International Community and also to Sri Lankans living abroad, as to why I am giving my support for the implementation of the 13th Amendment in full, as a first step before a final solution is recommended by the APRC. I speak also on behalf of Mr. D. Sitharthan and Mr. T. Sritharan representing the PLOTE and the Pathmanabha EPRLF respectively with whom the TULF has formed an alliance in the good interest of the Tamil speaking minorities. It is no secret that that we had been agitating for a solution based on the Federal concept and also offered to accept the Indian Model as an alternative if the term federal is allergic to any one. We have not changed our views in this matter and in the matter of merger of the North and the East. We assure everybody that while spurning violence we will by non-violent means and in a friendly way continue to persuade the citizens of our country to agree that no permanent solution can be found under a Unitary System. We will continue to dispel the fears of those who think that country will be divided. We will take all steps to erase off the minds of our people the idea of separation and to strongly support the concept of a United Sri Lanka.

To achieve this, the Government and the Media should seriously discourage propagating one section of the People as superior or inferior to another. We have joined today in this historic assembly that could be described as the Constituent Assembly taking its first step towards bringing peace, to the bleeding Nation and to its people who had undergone untold hardships for a period of half a century and more particularly during the past 25 years.

We have joined this assembly today to show our solidarity on behalf of the Tamil people, for the re-birth of a Nation where we the Sinhalese, Tamils, Muslims, Malays, Burgers and Members of all the other small groups live as equals in all respects, in a society where one is in no way superior or inferior to the other.

We dispute the claim of any one who says that this country belongs to one group or to the other. With only about 22 miles of the Palk Strait separating Sri Lanka from India, we call upon the 60 Million Tamils living across this strait to give their blessings and their co-operation to bring back normalcy and peace for our people and wish us a bright future without being misled by a handful of pro-LTTE Leaders on both sides. We assure the Tamils living across, that there is no attempt by anybody to annihilate the Tamils and that contrary to that, more than half of the Tamil population is living in the South happily among the Sinhalese and Muslims reposing confidence in them, far away from their tradition places of habitation.

Over a period of 20 years several opportunities were given to the LTTE to come back to the negotiating table. I had even volunteered to negotiate with the Government to obtain them a prominent role in the Administration of the North and the East. Even a general amnesty for the Leaders and the Cadre was offered. They did not pay any attention to any offer. Instead they are sacrificing valuable human lives on both sides every day. Even now these offers are open.

It is regrettable to note that apart from exposing our people to grave danger they have once again started massacring innocent Sinhalese Villagers who mind their own business without any interest in Politics. Our people, I mean the Sri Lankans had suffered enough, loss enough and are living in constant fear and tension. They want relief now.

His Excellency has assured that the APRC will continue with its task and the implementation of the 13th amendment is only an interim measure. We hope APRC will continue this process in the same spirit and find a solution which will meet the aspirations of the Tamil-speaking people. We whole-heartedly support His Excellency’s efforts to find Peace in our country.

I thank Hon. Tissa Vitharana and representatives of various political parties for the efforts they took.


Thanking you.


V. Anandasangaree,
President – TULF.

Wednesday 9 January 2008

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வும் இடைக்கால நிர்வாக அமைப்பும்

இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி பல்வேறு மட்டங்களிலும் நடைபெறும் கருத்துப் பரிமாறல்கள் விரைவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை சாத்தியமாக்கும் என்பது சரியானதே. அதனை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை அரசியல் யாப்புகளில் சேர்க்கப்படும்வரை இதற்கு வழி கோலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்க எம்மாலான அனைத்து உதவிகளும் ஊக்குவிப்புகளும் செய்யப்பட வேண்டும். இம்முயற்சிகளில் நம்பிக்கை வைத்து நமது பங்களிப்புகளை ஒருமுகப்படுத்தி வலுச் சேர்ப்பது இன்றியமையாதது. இதற்கான முயற்சிகளில் தமிழ் சமாதான ஒன்றியமும் அயராது செயல்பட்டுவரும். சர்வ கட்சி பிரதிசிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்பதிலும், அதுவும் கூடிய விரைவிலேயே சாத்தியமாக வேண்டும் என்பதிலும் அனைவரும்; உறுதியுடன் உழைக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் இதன் மூலம் பெறப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்களைத் தாண்டிச் செல்லவும், அப்போது ஏற்படக் கூடிய நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்கவும் தேவையான கால அவகாசம் குறித்து நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. இனப்பிரச்சனைக்கான தீர்வினையும், அத்தீர்வை எட்டுவதற்கான காலக்கெடுவினையும் கவனத்தில் கொள்ளும்போது நாம் கரிசனை கொள்ள வேண்டிய சில விடயங்கனை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

1. கடந்த முப்பது வருட கால யுத்தம் எமது மக்களின் வாழ்வின் மீது சுமத்தியுள்ள சுமைகள் ஓரளவுக்கேனும் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேணடிய தேவை

2. நீண்ட காலமாக எமது மக்களின் அன்றாட வாழ்வில் இலங்கை இராணுவம் ஆதிக்கம் செலுத்துவதை நீக்கும் வழிகளைப் புரிதல்

3. தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பிரதிநிதிகளுக்கு அதிகாரம்

4. சர்வதேச அரங்கில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமுள்ள பிரதிநிதிகளின் அவசியம்

மேற் கூறிய காரணங்களும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதியினை பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து பின்னர் அரசியல் யாப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை நடைமுறைபடுத்த தேவைப்படும் காலத்தைப் பற்றிய சரியான கணிப்பும், அரசியல் நிர்வாக அலகொன்று காலதாமதமின்றி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுபற்றி தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் தலைவர்கள் அக்கறையற்று இருக்க முடியாது என்பதினை தெளிவாக உணர்த்தும்.

மாறிவரும் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு தமது வலிமையினை பலப்படுத்திக் கொள்வதில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலமே ஜனநாயக அரசியல் வழிமுறைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆளுமை பெறும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அமுலாக்கப்பட்ட 13வது அரசியல் திருத்த சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்த மாகாண சபைகள் ஏனைய மாகாணங்களில் மட்டும் இயங்குவதற்கும், அவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்க விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் பெரும்பான்மை இனவாத அரசியலின் சூழ்ச்சியே முக்கிய காரணியாகும். மாகாண சபை நிர்வாகத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை தடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதினால் தமிழ் பேசும் மக்கள் அடைந்த இழப்புகள் அநேகம். தமிழ் பேசும் மக்கள் வாழ்வு சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாவதற்கு வடக்கு-கிழக்கு மாகாணசபை இயங்கவிடாமல் தடுக்கப்பட்டதே பிரதான காரணமாகும். மாகாண சபை தொடர்ச்சியாக இயங்கிவந்திருக்குமெனில் இன்று எமது இனம் தன்னுடைய பல உரிமைகளை இலகுவாக பெற்றிருக்க முடியும். நிட்சயமாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும.; விடுதலைப் புலிகளின் தவறான அரசியல் கணிப்புகள் பேரினவாத இனவாத அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கே ஆதரவாகிப் போயிற்று.

தற்போது அதே தவறை ஜனநாயக அரசியல் தலைவர்களினது அரசியல் கணிப்புகள் செய்து விடக்கூடாது என நாம் விரும்புகிறோம். அவர்கள் தமிழ் பேசும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தம்மால் இயன்ற அனைத்தினையும் செய்ய பின்நிற்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ் பேசும் மக்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சரியான அரசியல் அணுகுமுறை பற்றிய தெளிவினை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து நடைபெறும் கலந்துரையாடல்கள் மூலமே நாம் தவறிழைப்பது தவிர்க்கப்பட முடியும். நாம் ஒருவரோடு ஒருவர் கதைக்க முடியாத அளவிற்கு இறுகிப் போனவர்களாக இருப்பின் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பலமிழந்தவர்களாகவே இருப்போம். தமிழ் பேசும் மக்களை அழிவில் இருந்து மீட்பதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய நாம் பின்னிற்க கூடாது என்பதை நினைவு கூர்ந்தும், அமைதியை ஏற்படுத்தும் எந்த தருணத்தையும் தவற விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் செயல்படுமாறு தேசிய இன உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் தமிழ் பேசும் சமூகம் பெற்றிட உழைக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் வேண்டுகின்றோம்.

மேலும், தொடரும் சர்வ கட்சி பிரதிசிதிகள் குழு முயற்சிகளுக்கு பல்வேறு வகையிலும் உந்துதலை வழங்க வேண்டியதன் அவசியத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதனை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறோம். பெரும்பான்மையின பிரதிநிதிகளிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தவும், சிறுபான்மையினங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கூட்டங்கள் பாரிய அளவில் பயனுடையதாக இருக்க முடியும். அதன் மூலம் மட்டுமே அரசியல் சட்ட மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதில் ஜயமில்லை. சிலர் இதனை சர்வதேச உலகத்திற்க்கு மகிந்த அரசு செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு என்று கருதினாலும் அதனை பயனளிக்கும் செயல்முறையாக்குவது தமிழ் அரசியல் தலைமைகளின் சாதுரியமாகும்.

சர்வகட்சி பிரதிநிதிகளின் குழு முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் வரையிலான கால இடைவெளிக்குள் அதனை மேலும் விரைபு படுத்தக் கூடிய வகையில் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை ஏற்படுத்துவது தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். அதில் ஜனநாயக அரசியல் சக்திகள் பங்கெடுப்பது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைப்புகள் எந்த வகையிலும் சிங்கள மக்களின் நலனுக்கு பாதகமாக அமையாது என்பதினை குறிப்பாக அப்பகுதிகளில் வாழும் முஸ்லீம் சிங்கள மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆதரவை வென்றெடுக்க உதவும். முஸ்லிம் இன மக்களுடனான உறவுகளை சீர்படுத்தி வலிமைப்படுத்த முடியும்.

இடைக்கால நிர்வாக சபையினால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன?

1. அதன் மூலம் பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த முடியும்

2. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் தேவைகளைச் சொல்லவும், உதவிகளைக் கோரவும் முடியும்

3. இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்

4. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை வலுப்படுத்த முடியும.

5. ஊடகங்களுடன் உறவுகள் மேம்படுத்தப்பட முடியும். அவற்றின் பயனுள்ள தன்மையை பன்மடங்கு பயன்படுடத்த முடியும்

6. உள்வீட்டுத் தகவல்களை உடனுக்குடன் அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்

7. அந்திய மத்திய அரசுடனும் தமிழ் மாநில அரசுடனும் உத்தியோக உறவுகளை வளர்க்க முடியும்

8. மூலவளம், நிதி, மூலதனம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், சூழல், பாதுகாப்பு என்பவற்றின் மீதான செல்வாக்கினை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்

9. தமிழ் சிங்கள சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் பரஸ்பர நட்பையும் வளர்த்து நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி நகர முடியும்

10. சிங்கள தமிழ் இனவாத கூச்சல்களின் பொய்யுரைகளை பலவீனப்படுத்தி அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்து சமூகங்களும் நன்மையடைவதை யதார்தமாக நிரூபித்துக் காட்டும் வாய்ப்பினை பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும்.

11. சீரழிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வின் புணர்நிர்மானச் செயல்களை உடனடியாக அமுல்படுத்தி அதில் எமது பங்கினை வழங்க முடியும்

12. தமிழ் பேசும் மக்கள் இராணுவ, போராளிக் குழுக்களினால் துன்புறுத்தப்படுவதை தவிர்க்க முடியும்

13. ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் தாக்கங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் தமது வாழ்வினைத் தொடர ஆவன செய்ய முடியும.

14. திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்புடையனவாக இருக்கச் செய்ய முடியும்

15. அதிகாரப் பரவலாக்கலில் உள்ள தேவைகளை நடைமுறையின் மூலம் இலகுவில் புரிய வைக்க முடியும்

16. இலங்கை இராணுவம் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைக் கண்காணித்து அவற்றினைத் தவிர்க்க முடியும்

மேற்கூறிய அனைத்து விடயங்களிலும் முழுமையான செல்வாக்கினை வகிக்க முடியாவிட்டாலும் எமது முயற்சியினைப் பொறுத்து கணிசமான ஆளுமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க முடியும்.

இழுபறிப்பட்டுவரும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசுகள் அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் வரையில், உடனடியாக ஏற்படுத்தப் படக்கூடிய அதிகபட்ச அதிகாரமுள்ள இடைக்கால அரசியல் அமைப்பினை காலதாமதமின்றி ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகியுள்ளது.

தெளிவும் உறுதியும் இருக்கும் பட்சத்தில் இடைக்கால நிர்வாக அமைப்பினை சரிவர நிறுவ முயல்வதும், அதனை திறமையாக அமுல்படுத்துவதும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். எதிர் கட்சி அரசியல் நடைமுறை பழக்கங்களைத் தவிர்த்து, குறைந்த அளவேனும் அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக மாறுவதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயமாக நகர முடியும்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலம் எமது மக்களுக்கு நல்லதாக அமைய எமது அரசியல் அமைப்புகளும் தலைவர்களும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே பேரினவாதிகளின் எதிர்ப்புகளை வெல்ல முடியும்.

தமிழ் பேசும் மக்களின் நலன்களை மீட்கும் பொருட்டு எம்மாலான அனைத்தையும் செய்ய பின் நிற்கக் கூடாது என்பதை எமது அரசியல் தலைவர்கள் என்றும் மனதில் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கலந்துரையாடல்கள் மூலம் கருத்தொருமைப் பாட்டினை எற்படுத்தி காத்திரமான பங்களிப்பினை அவர்கள் வழங்க வேண்டுமென விரும்புகிறோம். புதிய வருடத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவர உங்களால் முடியும்.

பேச்சுவார்த்தைகளின் மூலமான நியாயமான நிரந்தர தீர்வு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு, பன்முக அரசியலுக்கு அங்கீகாரம் என்பவற்றை மதிக்கும் அனைவரும் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் சமாதான ஒன்றியம்
09/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com