Monday 28 January 2008

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் ஆதரவாளர்களுக்கு….

இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வும், சமாதானமும் அமைதியும் நிலவும் போரற்ற சூழலில் சகலரும் வாழும் ஒரு நிலையும், எப்போது வரும் என்று நீங்களும் எதிர்பார்ப்பீர்கள் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே அவற்றை அடைவதற்கு உதவும் முகமாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்வது பயனளிக்குமென நம்புகிறோம்.

தாயகத்தில் வாழும் எமது மக்கள் உயிருடன் வாழ்ந்து, உழைத்து, போரற்ற சூழலில், சுயகௌரவத்துடன், தமது பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக நேசித்து வளர்த்து, அவர்கள் வளர்ச்சியில் மனநிறைவெய்த சமாதானமும் நியாயமுமான தீர்வும், போருக்கான முடிவும் ஏற்பட நீங்கள் உதவ முன்வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனைவரும் சரியான வழிமுறைகளுக்கு ஒத்துழைப்போமானால் காலக் கிரமத்தில் இந்த இலக்குகளை அடைவது இலகுவாக இருக்குமென நாம் நம்புகிறோம். கடந்த முப்பது வருட போரினால் எமது மக்கள் அடைந்த துன்பங்களும் - துயரங்களும் - இன்னல்களும் - இழப்புகளும், இன்னும் ஒரு வருடமேனும் தொடரக் கூடாதென்பதே எமது பேரவாவாகும். அளவிலா அன்புடன் தாயக மக்களை நேசிக்கும் உங்கள் உள்ளம், உங்களைப் போலவே அவர்களும் வாழ விரும்புவதை, ஏங்குவதை உணர்ந்து கொள்ள ஒரு கணம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமக்கு நியாயமான தீர்வு வர வேண்டுமெனில் எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை எதிர் தரப்பு முன் வைக்க வேண்டுமென்பது எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எமது போராட்ட வழிமுறைகள் அனைத்தும் அதனை ஊக்குவிப்பதாக - அவர்கள் அதனை முன் வைப்பதை இலகுவாக்குவதாக இருக்க வேண்டும். எமது சாம - பேத - தான - தண்ட போராட்ட வழிமுறைகள் அனைத்தும் எதிர் தரப்பின் செயல்பாட்டை இலகுவாக்குவதாக இருந்தால் மட்டுமே அத்தகைய தீர்வு முன்வைக்கப்படுவது சாத்தியமாகும். எமது போராட்டமும் வெற்றி பெறும். மாறாக எமது நடைமுறைகள் அனைத்தும் அவர்கள் நியாயமான தீர்வொன்றை முன்வைப்பதை தோற்கடிக்கும் செயல்முறைகளாக இருக்குமெனில் நாம் தோல்வியடைவதும் தவிர்க்க முடியாததாகும். அத்தகைய போராட்ட வழிமுறைகள் எமது மக்களின் நிகழ்கால எதிர்கால நல்வாழ்வை நாசமாக்குவதின்றி வேறு எதனையும் சாதிக்க போவதில்லை.

பொதுவாக, அனைவருக்கும் இயல்பாக தோன்றும் உணர்வுகளைப் போலவே நாமும் எமது நலன்கள், எமது உரிமைகள், எமது பாதுகாப்பு என்று மட்டுமே உணர்ச்சிவசப்பட்டுக் கொள்வதால், எமது பக்க கோரிக்கைகளின் நியாயங்களும், அதனை வெளிப்படுத்தும் முறைகளை நியாயப்படுத்தும் தன்மையுமே எமது சிந்தனையில் மேலோங்கி இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எமது ஒரு பக்கப்பார்வை எமது உணர்வுகளைத் திரித்து, எமது சிந்தனையும் செய்கைகளும் எம்மை அறியாமலே இயல்பாக மாற்றமடைந்து, நாம் தவறிழைப்பதை இலகுவாக்கும். அதனை நியாயப்படுத்துவதை இன்னும் உறுதியாக்கும். பிரச்சார ஊடகங்கள் ஏற்படுத்தும் உணர்வலைகள் சாத்தியமான மாற்று அணுகுமுறைகள் பற்றி சிந்திப்பதை தவிர்த்துவிடும்.

எமது உரிமை, எமது நலன், எமது பாதுகாப்பு என்ற பார்வை தேவையெனினும், அதற்குள்ளேயே நம்மைக் குறுக்கிக் கொள்வதால் எதிர்தரப்பு தனது நலன்கள், தனது உரிமைகள், தனது பாதுகாப்பு பற்றி முன்வைக்கும் நியாயங்களையும் அதற்கான காரணங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை அறியவும், அவர்களை எமக்கு சாதகமான நியாயமான தீர்வுகளை முன்வைக்கும் வகையில் நகர்த்துவது எப்படி என்று ஆராயவும் தவறி விடுகிறோம்.

அவர்கள் பக்கமுள்ள நியாயமான வாதங்களை புரிவதும் அதற்கான உத்தரவாதங்களை வழங்குவதும், நியாயமான தீர்வினை அவர்கள் முன்வைக்கக் கூடிய கவர்ச்சியுள்ள பொருளாக மாற்றுவதும் எமது கடமையாகும். இதனை நாம் செய்ய இயலாத பட்சத்தில் இருசாராரும் ஏற்றக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வு சாத்தியமில்லை.

இலங்கை அரசு நியாயமான தீர்வினை முன்வைக்க சிங்கள இனவாத சத்திகளின் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க உதவும் வகையில் நாம் மேற்கொண்ட செயல்முறைகள் எவை?

விடுதலைப்புலிகளின் பெரும்பாலான செயல்முறைகள் பேரினவாத சத்திகளை தூண்டிவிடுவதையே சாதித்துள்ளன. அவர்கள் கக்கும் விஷமே எமது மக்களுக்கு விமோசனம் தரும் என்றும், அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் அழிவுகளே எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்ற வகையிலுமே செயல்படுகிறோம். எமது அழிவுப் பாதையை நாமே தெரிவு செய்து அதுவே எமது குறிக்கோளை அடைவதற்கான வழியென அனைத்து மக்களையும் அதனை ஏற்கும் படி பலாத்கார திணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறோம்.

சமாதானம் வரவேண்டுமெனில் முன்வைக்கப்படும் தீர்வு நியாயமான தீர்வு என்ற உணர்வு அனைத்து தரப்பினருக்கும் வரவேண்டும். அதனை யதார்த்தமாக்கும் வகையில் எமது பேச்சுக்கள், செயல்முறைகள் அனைத்தும் அமைய வேண்டும். அனைத்தையும் வன்முறைகள் மூலமே சாதிக்கலாம் என்று செயல்பட்டால், மனித அழிவை மட்டுமே நாம் நேசித்தவர்களாவோம்.

ஆயுத வலிமையால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பி செயல்படுவது ஆயுத போட்டியினை வளர்த்து அதிகமான அழிவினையே ஏற்படுத்தும். ஆயுதங்களின் ஆதிக்கம் மனித நேயங்களை புறக்கணித்து, யதார்த்த நிலமைகளால் குறிக்கோளை மறந்து, தனிமனித உணர்வுகளின் கொந்தளிப்புகளுக்கு விடுதலை தேடும் விபரீத வேட்டை விளையாட்டாக போராட்ட வடிவங்களை மாற்றும்.

பொதுவாகவே நீ அவனுடைய நிலையில் இருந்து பார்த்தால் தான் உனக்குத் தெரியும் என்று கூறுவார்கள். (You put yourself in their shoes) . தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான உரிமையுள்ள தீர்வை முன்வைக்க விரும்பும் சிங்கள அரசியல் சக்திகளின் நிலையிலிருந்து யோசித்தால், எமது செய்கைகளின் மூலம் நாம் அவர்கள் செயலை இலகுவாக்கிறோமா என்று புரியும். வேலியே பயிரை மேயும் கதை எமக்கும் பொருந்தும் என்பதை புரிந்து கொள்வோம்.

எமது போராட்டம், இலங்கையில் காணப்பட்ட ஜனநாயக அரசியல் முறையில் இருக்கும் குறைகளை நீக்கி, அக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே அல்லாமல். ஏற்கனவே காணப்பட்ட ஜனநாயக உரிமைகளையும் நீக்கி மன்னர் ஆட்சியையோ சர்வாதிகாரத் தன்மை கொண்ட அல்லது அராஜகத் தன்மை கொண்ட ஆட்சியையோ நிறுவுவதற்கு உதவுவதாக இருக்கக் கூடாது. எமது போராட்டம் நாட்டில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவது என்ற குறிக்கோள் மனதிலிருக்குமானால் சரியான வழிமுறைகள் இலகுவில் விளங்கும்.

தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே என்பதே உங்கள் சிந்தனைக்கு சரியாக இருப்பினும், அதை அடைவதற்கான அணுகுமுறைகள் குறித்து தவறுகளை சுட்டிக்காட்டுவதும், சுதந்திரமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெறுவதும் அவசியமாகாதா? தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தடியெடுத்தவன் எல்லாம் தலைவனாகலாம் என்றிருக்கையில் அந்த வழியில் போனால் சரியான பாதையால் போக முடியுமா?

இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் உரிமைப் போராட்டங்கள் குறைந்த பட்சம் மூன்று கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்:

1. உரிமைக்கு போராடும் சமூகத்தின் அர்ப்பணிப்பு

2. அப்போராட்டத்தின் உள்ளடக்கத்தினதும், வழிமுறைகளினதும் நியாயமுள்ள
தன்மை

3. நியாயமாக முன்வைக்கப்படும் பரிந்துரைகளை செவிமடுக்கும் நேர்மை

இதில் முதலாவது அம்சத்தில், இதுவரை கால எமது மக்களின் இழப்புகள், அழிவுகள், தியாகங்கள், துரோகங்கள் யாவும் தேவைக்கும் மிக அதிகமாகவே சமூகத்தின் உரிமைக்காக போராடும் எமது அர்ப்பணிப்பை உலகிற்கு காட்டியள்ளன. இனிமேலும் அவற்றிற்கு எந்தவித தேவையுமில்லை.

மற்றைய இரண்டு அம்சங்களிலும் எமது பங்களிப்பு உலக அரங்கில் மிக மோசமாக கணிக்கப்படுவது தெட்டத்தெளிவு. இவற்றில் கணிசமான மாற்றங்கள் வரும் வரையில் எமது நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கிறது. உங்களின் நல்வாக்கும் நற்செய்கையும் நன்மை விளைவிக்கும் என்று உறுதியுடன் நம்பலாம். நீங்கள் மனதில் எதை நினைத்து செயல்பட்டாலும் எவரும் தாயகத்தில் தமிழ் மக்கள் வாழ்வு நாசமாக்கப்பட வேண்டும் என்று நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.

தனி மனிதனின் உரிமையை மதிப்பது இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு பங்கம் விளைவிக்க முடியாது என்பதை நீங்கள் உணரவேண்டும். மாறாக மனிதனின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் மதிக்கும் இனமாக நாம் பெருமையடன் மிளிர முடியும்.

இலங்கையில் சமாதானமும் நியாயமான ஓர் அரசியல் தீர்வும் போருக்கு முடிவும் வர உங்களாலும் நிட்சயம் உதவ முடியும். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை கொண்டுவர முயலும் அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் உங்கள் பேச்சுக்கள் செயல்களை அமைத்து உங்கள் பங்களிப்பை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதன் மூலமே உங்கள் கருத்துக்களும் மதிப்புடன் செவிமடுக்கப்படும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் எமது நாட்டு மக்கள் அனைவரதும் உயிருக்கும், உரிமைக்கும் உத்தரவாதம் வழங்குவதாக அமைய வேண்டும். இதன் மூலமே, பேரினவாத அரசியல் சக்திகளின் அழிவுகளை நாம் உலகஅரங்கில் அம்பலப்படுத்த முடியும். சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நியாயமான அளவு பெற முடியும். எமது மக்களின் அழிவுகளைப் பெருக்கி, அயலவர்களாக வாழ வேண்டிய சகோதர இனங்களின் உறவுகளைக் கெடுத்து, சொல்லொணாத் துயரங்களை எமது சொந்த மக்கள் மேல் சுமத்தி, எந்தவொரு உயிருக்கும் உத்தரவாதமில்லாததொரு நிலையைத் தோற்றுவித்ததைத்தவிர எமது மக்களின் விடுதலைக்கான போராட்டம் இதுவரை சாதித்ததென்ன என ஒரு முறை சிந்தித்துப்பாருங்கள். இந்த நிலை இன்னும் எத்தனை வருடங்கள் தொடரும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

தமிழ் மக்கள் மனித உரிமைகளை மதிப்பதன் மூலமே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த முடியும். இன்னொருவருடைய கருத்தைக் கவனத்தில் கொள்வதன் மூலம் நாங்கள் ஒன்றையும் இழக்கப் போவதில்லை. இனப்பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாக நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. சமாதானம் மூலமான தீர்வொன்றே எங்களுடைய தெரிவு எனின், எங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் சமாதானம் மூலமான தீர்வொன்றை தூண்டுவதாக அமைய வேண்டும். அதற்கு, உங்களுடைய ஆதரவில் எந்த வொரு உயிரும் இனிமேல் இழக்கப்படக் கூடாது என்பதையே அகரமாக கொள்ளவேண்டும்.

மனித நேயம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்தி இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்த உங்களால் இன்னும் காத்திரமாக பங்காற்ற முடியும்.

விடுதலைப் போராட்டம் பற்றிய உங்கள் கருத்துக்கள் விசாலமடையும் போது தமிழ் மக்கள் நிச்சயமாக பெருமைப்பட முடியும்.


தமிழ் சமாதான ஒன்றியம்

28/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom
tamilforumforpeace@gmail.com

Thursday 24 January 2008

சர்வ கட்சிக்குழு தலைவர் பேராசிரியர் திஸ்ச விதாரன ஜனாதிபதிக்கு கையளித்த ஆலோசனைகள்



APRC Proposals to President

The following are the proposals handed over to President Mahinda Rajapaksa by the All Party Representative Committee (APRC) yesterday, on fully implementing relevant provisions in the present Constitution, in order to achieve maximum and effective devolution of powers to the provinces in the short term


ACTION TO BE TAKEN BY THE PRESIDENT TO FULLY IMPLEMENT RELEVANT PROVISIONS OF THE PRESENT CONSTITUTION AS A PRELUDE TO THE APRC PROPOSALS

1. Introduction

1.1 The APRC was mandated by the President to prepare a set of proposals that would be the basis for a solution to the national question. After 63 sittings over a period of 1½ years the consensus document is being finalised and it should be possible to hand it over to the President in the very near future. The outcome would be a basis for appropriate constitutional arrangements. Implementation of this would of course require amendment of the present Constitution, and in respect of some Articles, approval by the People at a referendum. This would of course take time, once a favourable climate is established.

1.2 Under the circumstances, the APRC taking into consideration its own proposals, has identified a course of action to achieve maximum and effective devolution of powers to the provinces in the short term. The emphasis would be on meeting the aspirations of the Tamil speaking peoples, especially in the North and East. This would be done within the framework of the present Constitution, that is, the 1978 Constitution. The course of action proposed by the APRC would be implementable with immediate effect, and envisages an interim arrangement pending the restoration of democratically elected Provincial Councils in the North and East.

1.3 The 13th Amendment to the 1978 Constitution was enacted following the Indo Sri Lanka Agreement of July 1987. It resulted in the setting up of Provincial Councils throughout Sri Lanka and it devolved power to the Provinces under the unitary Constitution. The powers devolved fall under a Provincial List and a Concurrent List. All other powers were reserved for the Centre through a Reserved List. Further, any subject or function not included in any of the three Lists will also be deemed to be a subject or function in the Reserved List.

1.4 Implementation of subjects and functions devolved on the Provinces through the Concurrent List has not taken place at all due to the fact most of these subjects and functions were retained by the Centre as if they also belonged to the Reserved List.

2. Steps necessary to permit Maximum Devolution of Powers to Provinces under the 13th Amendment

2.1 The Government should endeavour to implement the 13th Amendment to the Constitution in respect of legislative, executive and administrative powers, overcoming existing shortcomings.

2.2 Adequate funds should be provided by the Government to facilitate effective functioning of the Provincial Councils.

2.2.1 The Centre should hereinafter route all finances in respect of special projects undertaken by the Centre in the Provinces, if they are on subjects under the purview of the Provinces, through the respective Provincial Administrations.

3. Special Arrangements necessary to permit Maximum Devolution of Powers to the Northern and Eastern Provinces under the 13th Amendment

3.1 The APRC is of the view that conditions in the Eastern Province are conducive to holding elections to the Provincial Council and that elections should be held immediately.

3.2 Conditions in the Northern Province are far from being peaceful. A free and fair election in the North will not be possible in the near future. Hence an alternative arrangement is required in the Northern Province to enable the people of that Province to enjoy the fruits of devolution.

3.3 As it is not possible to hold elections in the North, the President could make appropriate order to establish an Interim Council for the Northern Province in terms of the Constitution.

3.4 The Interim Council of a Province will aid and advise the Governor in the exercise of his executive powers, and will function until Provincial Council elections are held in that Province.

3.4.1 The Interim Council should reflect the ethnic character of that Province.

3.4.2 It is proposed that the Interim Council for a Province should consist of individuals who have political experience and an abiding interest in the development of the Province and in its people and be acceptable to the people of the Province. A person to qualify for appointment as a member of an Interim Council should have a thorough knowledge of the particular Province.

4. Implementation of the Official Languages Provision of the Constitution

4.1 The Government should take immediate steps to ensure that Parliament enacts laws to provide for the full implementation of Chapter IV of the Constitution on Language.

4.2 There are many contexts in which remedial measures will assume an administrative, rather than a legislative, character.

The following are instances of measures which should be strenuously accelerated and implemented by the Government.

(a) recruitment of Tamil speaking police officers in sufficient numbers to enable Tamil speaking members of the public, not only in the North and East, but in the country as a whole, to transact business in their own language in police stations;

(b) the taking of all steps, including recruitment of staff and procurement of equipment to enable Tamil speaking members of the public to deal with Ministries, Government Departments, statutory corporations and all other public bodies in their own language;

(c) the regular holding of, and streamlining of procedures for, mobile "clinics" where officials fluent in the Tamil language will engage problem solving on the spot;

(d) the provision of interpreters, translators and other relevant facilities in all courts of law, so that the needs of members of provincial minority communities are catered fully with regard to all aspects of the administration of justice;

(e) The Sinhala minorities in the North and East suffer from disadvantages similar to those affecting Tamil speaking peoples as mentioned above. Suitable steps should be taken to address them along the same lines.

The All Party Representative Committee (APRC) comprised:
1. Sri Lanka Freedom Party
2. United National Party (D)
3. Jathika Hela Urumaya
4. Ceylon Workers Congress
5. Sri Lanka Muslim Congress
6. All Ceylon Muslim Congress
7. Mahajana Eksath Peramuna
8. National Unity Alliance
9. Up-country People’s Front
10. Communist Party of Sri Lanka
11. Eelam People’s Democratic Party
12. National Congress
13. Western People’s Front
14. Lanka Sama Samaja Party

Wednesday 23 January 2008

ஜனாதிபதியிடம் சர்வ கட்சிக்குழுவின் ஆலோசனைக் கையளிப்பு நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆற்றிய உரை


23.01.2008.

Speech made by President TULF at the handing over ceremony of the Proposal by Hon. Tissa Vitharana to His Excellency the President Mr. Mahinda Rajapakse.

Your Excellency the President, Hon. Ministers, Hon. Members of Parliament, Leaders of Political Parties, Ladies and Gentlemen.

It may be a surprise to all of you to see me participating in today’s ceremony held to hand over an interim report of the APRC to His Excellency the President by Hon. Tissa Vitharana, I owe an explanation to the People of this country, to the International Community and also to Sri Lankans living abroad, as to why I am giving my support for the implementation of the 13th Amendment in full, as a first step before a final solution is recommended by the APRC. I speak also on behalf of Mr. D. Sitharthan and Mr. T. Sritharan representing the PLOTE and the Pathmanabha EPRLF respectively with whom the TULF has formed an alliance in the good interest of the Tamil speaking minorities. It is no secret that that we had been agitating for a solution based on the Federal concept and also offered to accept the Indian Model as an alternative if the term federal is allergic to any one. We have not changed our views in this matter and in the matter of merger of the North and the East. We assure everybody that while spurning violence we will by non-violent means and in a friendly way continue to persuade the citizens of our country to agree that no permanent solution can be found under a Unitary System. We will continue to dispel the fears of those who think that country will be divided. We will take all steps to erase off the minds of our people the idea of separation and to strongly support the concept of a United Sri Lanka.

To achieve this, the Government and the Media should seriously discourage propagating one section of the People as superior or inferior to another. We have joined today in this historic assembly that could be described as the Constituent Assembly taking its first step towards bringing peace, to the bleeding Nation and to its people who had undergone untold hardships for a period of half a century and more particularly during the past 25 years.

We have joined this assembly today to show our solidarity on behalf of the Tamil people, for the re-birth of a Nation where we the Sinhalese, Tamils, Muslims, Malays, Burgers and Members of all the other small groups live as equals in all respects, in a society where one is in no way superior or inferior to the other.

We dispute the claim of any one who says that this country belongs to one group or to the other. With only about 22 miles of the Palk Strait separating Sri Lanka from India, we call upon the 60 Million Tamils living across this strait to give their blessings and their co-operation to bring back normalcy and peace for our people and wish us a bright future without being misled by a handful of pro-LTTE Leaders on both sides. We assure the Tamils living across, that there is no attempt by anybody to annihilate the Tamils and that contrary to that, more than half of the Tamil population is living in the South happily among the Sinhalese and Muslims reposing confidence in them, far away from their tradition places of habitation.

Over a period of 20 years several opportunities were given to the LTTE to come back to the negotiating table. I had even volunteered to negotiate with the Government to obtain them a prominent role in the Administration of the North and the East. Even a general amnesty for the Leaders and the Cadre was offered. They did not pay any attention to any offer. Instead they are sacrificing valuable human lives on both sides every day. Even now these offers are open.

It is regrettable to note that apart from exposing our people to grave danger they have once again started massacring innocent Sinhalese Villagers who mind their own business without any interest in Politics. Our people, I mean the Sri Lankans had suffered enough, loss enough and are living in constant fear and tension. They want relief now.

His Excellency has assured that the APRC will continue with its task and the implementation of the 13th amendment is only an interim measure. We hope APRC will continue this process in the same spirit and find a solution which will meet the aspirations of the Tamil-speaking people. We whole-heartedly support His Excellency’s efforts to find Peace in our country.

I thank Hon. Tissa Vitharana and representatives of various political parties for the efforts they took.


Thanking you.


V. Anandasangaree,
President – TULF.

Wednesday 9 January 2008

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்வும் இடைக்கால நிர்வாக அமைப்பும்

இலங்கையில் இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் பற்றி பல்வேறு மட்டங்களிலும் நடைபெறும் கருத்துப் பரிமாறல்கள் விரைவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை சாத்தியமாக்கும் என்பது சரியானதே. அதனை நடைமுறைப்படுத்த தேவையான சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு அவை அரசியல் யாப்புகளில் சேர்க்கப்படும்வரை இதற்கு வழி கோலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்க எம்மாலான அனைத்து உதவிகளும் ஊக்குவிப்புகளும் செய்யப்பட வேண்டும். இம்முயற்சிகளில் நம்பிக்கை வைத்து நமது பங்களிப்புகளை ஒருமுகப்படுத்தி வலுச் சேர்ப்பது இன்றியமையாதது. இதற்கான முயற்சிகளில் தமிழ் சமாதான ஒன்றியமும் அயராது செயல்பட்டுவரும். சர்வ கட்சி பிரதிசிதிகள் குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும் என்பதிலும், அதுவும் கூடிய விரைவிலேயே சாத்தியமாக வேண்டும் என்பதிலும் அனைவரும்; உறுதியுடன் உழைக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதே நேரத்தில் இதன் மூலம் பெறப்படும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமங்களைத் தாண்டிச் செல்லவும், அப்போது ஏற்படக் கூடிய நெருக்கடிகளை வெற்றிகரமாக சமாளிக்கவும் தேவையான கால அவகாசம் குறித்து நாம் அசட்டையாக இருந்துவிட முடியாது. இனப்பிரச்சனைக்கான தீர்வினையும், அத்தீர்வை எட்டுவதற்கான காலக்கெடுவினையும் கவனத்தில் கொள்ளும்போது நாம் கரிசனை கொள்ள வேண்டிய சில விடயங்கனை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

1. கடந்த முப்பது வருட கால யுத்தம் எமது மக்களின் வாழ்வின் மீது சுமத்தியுள்ள சுமைகள் ஓரளவுக்கேனும் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேணடிய தேவை

2. நீண்ட காலமாக எமது மக்களின் அன்றாட வாழ்வில் இலங்கை இராணுவம் ஆதிக்கம் செலுத்துவதை நீக்கும் வழிகளைப் புரிதல்

3. தமிழ்பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் பிரதிநிதிகளுக்கு அதிகாரம்

4. சர்வதேச அரங்கில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரமுள்ள பிரதிநிதிகளின் அவசியம்

மேற் கூறிய காரணங்களும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பொதியினை பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து பின்னர் அரசியல் யாப்புகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை நடைமுறைபடுத்த தேவைப்படும் காலத்தைப் பற்றிய சரியான கணிப்பும், அரசியல் நிர்வாக அலகொன்று காலதாமதமின்றி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுபற்றி தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் தலைவர்கள் அக்கறையற்று இருக்க முடியாது என்பதினை தெளிவாக உணர்த்தும்.

மாறிவரும் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு தமது வலிமையினை பலப்படுத்திக் கொள்வதில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலமே ஜனநாயக அரசியல் வழிமுறைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஆளுமை பெறும்.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அமுலாக்கப்பட்ட 13வது அரசியல் திருத்த சட்டத்தின் மூலம் நடைமுறைக்கு வந்த மாகாண சபைகள் ஏனைய மாகாணங்களில் மட்டும் இயங்குவதற்கும், அவை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்க விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கும் பெரும்பான்மை இனவாத அரசியலின் சூழ்ச்சியே முக்கிய காரணியாகும். மாகாண சபை நிர்வாகத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை தடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டதினால் தமிழ் பேசும் மக்கள் அடைந்த இழப்புகள் அநேகம். தமிழ் பேசும் மக்கள் வாழ்வு சீர்குலைக்கப்பட்டு சின்னாபின்னமாவதற்கு வடக்கு-கிழக்கு மாகாணசபை இயங்கவிடாமல் தடுக்கப்பட்டதே பிரதான காரணமாகும். மாகாண சபை தொடர்ச்சியாக இயங்கிவந்திருக்குமெனில் இன்று எமது இனம் தன்னுடைய பல உரிமைகளை இலகுவாக பெற்றிருக்க முடியும். நிட்சயமாக பல்லாயிரக் கணக்கான இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும.; விடுதலைப் புலிகளின் தவறான அரசியல் கணிப்புகள் பேரினவாத இனவாத அரசியல்வாதிகளின் அபிலாசைகளுக்கே ஆதரவாகிப் போயிற்று.

தற்போது அதே தவறை ஜனநாயக அரசியல் தலைவர்களினது அரசியல் கணிப்புகள் செய்து விடக்கூடாது என நாம் விரும்புகிறோம். அவர்கள் தமிழ் பேசும் மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக தம்மால் இயன்ற அனைத்தினையும் செய்ய பின்நிற்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

தமிழ் பேசும் மக்களின் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சரியான அரசியல் அணுகுமுறை பற்றிய தெளிவினை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து நடைபெறும் கலந்துரையாடல்கள் மூலமே நாம் தவறிழைப்பது தவிர்க்கப்பட முடியும். நாம் ஒருவரோடு ஒருவர் கதைக்க முடியாத அளவிற்கு இறுகிப் போனவர்களாக இருப்பின் தமிழ் பேசும் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் பலமிழந்தவர்களாகவே இருப்போம். தமிழ் பேசும் மக்களை அழிவில் இருந்து மீட்பதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய நாம் பின்னிற்க கூடாது என்பதை நினைவு கூர்ந்தும், அமைதியை ஏற்படுத்தும் எந்த தருணத்தையும் தவற விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டும் செயல்படுமாறு தேசிய இன உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் தமிழ் பேசும் சமூகம் பெற்றிட உழைக்கும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் வேண்டுகின்றோம்.

மேலும், தொடரும் சர்வ கட்சி பிரதிசிதிகள் குழு முயற்சிகளுக்கு பல்வேறு வகையிலும் உந்துதலை வழங்க வேண்டியதன் அவசியத்தை புறக்கணிக்கக் கூடாது என்பதனை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறோம். பெரும்பான்மையின பிரதிநிதிகளிடையே புரிந்துணர்வுகளை ஏற்படுத்தவும், சிறுபான்மையினங்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு கூட்டங்கள் பாரிய அளவில் பயனுடையதாக இருக்க முடியும். அதன் மூலம் மட்டுமே அரசியல் சட்ட மாற்றங்கள் சாத்தியமாகும் என்பதில் ஜயமில்லை. சிலர் இதனை சர்வதேச உலகத்திற்க்கு மகிந்த அரசு செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு என்று கருதினாலும் அதனை பயனளிக்கும் செயல்முறையாக்குவது தமிழ் அரசியல் தலைமைகளின் சாதுரியமாகும்.

சர்வகட்சி பிரதிநிதிகளின் குழு முடிவுகள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் வரையிலான கால இடைவெளிக்குள் அதனை மேலும் விரைபு படுத்தக் கூடிய வகையில் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றினை ஏற்படுத்துவது தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். அதில் ஜனநாயக அரசியல் சக்திகள் பங்கெடுப்பது வடக்கு கிழக்கு மாகாண சபை அமைப்புகள் எந்த வகையிலும் சிங்கள மக்களின் நலனுக்கு பாதகமாக அமையாது என்பதினை குறிப்பாக அப்பகுதிகளில் வாழும் முஸ்லீம் சிங்கள மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆதரவை வென்றெடுக்க உதவும். முஸ்லிம் இன மக்களுடனான உறவுகளை சீர்படுத்தி வலிமைப்படுத்த முடியும்.

இடைக்கால நிர்வாக சபையினால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன?

1. அதன் மூலம் பெறக்கூடிய அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு பெற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த முடியும்

2. சர்வதேச அரங்கில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக அவர்கள் தேவைகளைச் சொல்லவும், உதவிகளைக் கோரவும் முடியும்

3. இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்

4. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகளை வலுப்படுத்த முடியும.

5. ஊடகங்களுடன் உறவுகள் மேம்படுத்தப்பட முடியும். அவற்றின் பயனுள்ள தன்மையை பன்மடங்கு பயன்படுடத்த முடியும்

6. உள்வீட்டுத் தகவல்களை உடனுக்குடன் அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்

7. அந்திய மத்திய அரசுடனும் தமிழ் மாநில அரசுடனும் உத்தியோக உறவுகளை வளர்க்க முடியும்

8. மூலவளம், நிதி, மூலதனம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், சூழல், பாதுகாப்பு என்பவற்றின் மீதான செல்வாக்கினை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியும்

9. தமிழ் சிங்கள சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் பரஸ்பர நட்பையும் வளர்த்து நிரந்தர அமைதியையும் சமாதானத்தையும் நோக்கி நகர முடியும்

10. சிங்கள தமிழ் இனவாத கூச்சல்களின் பொய்யுரைகளை பலவீனப்படுத்தி அதிகாரப் பகிர்வின் மூலம் அனைத்து சமூகங்களும் நன்மையடைவதை யதார்தமாக நிரூபித்துக் காட்டும் வாய்ப்பினை பயனுள்ள முறையில் பயன்படுத்த முடியும்.

11. சீரழிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வின் புணர்நிர்மானச் செயல்களை உடனடியாக அமுல்படுத்தி அதில் எமது பங்கினை வழங்க முடியும்

12. தமிழ் பேசும் மக்கள் இராணுவ, போராளிக் குழுக்களினால் துன்புறுத்தப்படுவதை தவிர்க்க முடியும்

13. ஆயதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதன் தாக்கங்களிலிருந்து விடுபட்டு மீண்டும் தமது வாழ்வினைத் தொடர ஆவன செய்ய முடியும.

14. திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு ஏற்புடையனவாக இருக்கச் செய்ய முடியும்

15. அதிகாரப் பரவலாக்கலில் உள்ள தேவைகளை நடைமுறையின் மூலம் இலகுவில் புரிய வைக்க முடியும்

16. இலங்கை இராணுவம் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைக் கண்காணித்து அவற்றினைத் தவிர்க்க முடியும்

மேற்கூறிய அனைத்து விடயங்களிலும் முழுமையான செல்வாக்கினை வகிக்க முடியாவிட்டாலும் எமது முயற்சியினைப் பொறுத்து கணிசமான ஆளுமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்க முடியும்.

இழுபறிப்பட்டுவரும் சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் சிபாரிசுகள் அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வரும் வரையில், உடனடியாக ஏற்படுத்தப் படக்கூடிய அதிகபட்ச அதிகாரமுள்ள இடைக்கால அரசியல் அமைப்பினை காலதாமதமின்றி ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகியுள்ளது.

தெளிவும் உறுதியும் இருக்கும் பட்சத்தில் இடைக்கால நிர்வாக அமைப்பினை சரிவர நிறுவ முயல்வதும், அதனை திறமையாக அமுல்படுத்துவதும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். எதிர் கட்சி அரசியல் நடைமுறை பழக்கங்களைத் தவிர்த்து, குறைந்த அளவேனும் அதிகாரமுள்ள ஆட்சியாளர்களாக மாறுவதன் மூலம் தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைகளைப் பெறுவதற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நிச்சயமாக நகர முடியும்.

நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலம் எமது மக்களுக்கு நல்லதாக அமைய எமது அரசியல் அமைப்புகளும் தலைவர்களும் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே பேரினவாதிகளின் எதிர்ப்புகளை வெல்ல முடியும்.

தமிழ் பேசும் மக்களின் நலன்களை மீட்கும் பொருட்டு எம்மாலான அனைத்தையும் செய்ய பின் நிற்கக் கூடாது என்பதை எமது அரசியல் தலைவர்கள் என்றும் மனதில் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கலந்துரையாடல்கள் மூலம் கருத்தொருமைப் பாட்டினை எற்படுத்தி காத்திரமான பங்களிப்பினை அவர்கள் வழங்க வேண்டுமென விரும்புகிறோம். புதிய வருடத்தில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவர உங்களால் முடியும்.

பேச்சுவார்த்தைகளின் மூலமான நியாயமான நிரந்தர தீர்வு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பு, பன்முக அரசியலுக்கு அங்கீகாரம் என்பவற்றை மதிக்கும் அனைவரும் இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் சமாதான ஒன்றியம்
09/01/2008
Tamil Forum for Peace (TFP)
27 Old Gloucester Street
LONDON WC1N 3XX
United Kingdom

tamilforumforpeace@gmail.com