Saturday 11 October 2008

இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும் : பொதுக்கூட்டம்

இலங்கை ஜனநாயக ஒன்றியம் நடத்தும்

பொதுக்கூட்டம்

இலங்கையின் உள்நாட்டுப்போரும் பொருளாதாரமும்
வடகிழக்குப்பிரதேசங்களில் பிரத்தியேக நோக்குடன்

பேச்சாளர்: முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்
(பிரதான ஆய்வாளர், பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனம்)

South Ruislip Methodist church,
Queens Walk, South Ruislip,
Middlesex HA4 0NL

சனிக்கிழமை 11 ஒக்டோபர் 2008
பி.ப 2.00 - பி.ப 5.00 வரை

(முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் பிரதான ஆய்வாளரும் இலங்கையில் நன்கறியப்பட்ட பொருளியல் நிபுணருமாவார். இவர் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இலங்கை அரசின் நிதி, திட்டமிடல் அமைச்சுக்கும் பொருளாதாரம், பொருளியல் திட்ட சீர்திருத்தம், பொருளாதாரம் மீது போரின் பாதிப்பு ஆகிய விடயங்கள் பற்றி ஆலோசகராக பணிபுரிந்துள்ளார். புராட்போர்ட் பல்கலைக்கழகம், ஐக்கியநாடுகளின் சமாதானக்கல்வித்துறை பற்றிய பயிலல்களில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பொருளாதாரமும் போரும், போர், பிள்ளைகள், பெண்கள், பொருளாதார வறுமை, சமத்துவமின்மை ஆகியவற்றில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் பொதுவாக போரும் உள்நாட்டுப்போரும் என்ற விடயம் பற்றியும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்; புத்தகங்களின் துணையாசிரியராக இருந்துள்ளார். கொன்டெம்பரரி சவுத் ஏசியா என்று ரவுட்லெட்ஜ் பிரசுரிக்கும் ஜேர்னலின் சர்வதேச நெறியாள்கைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார். தற்சமயம் புல்பிரைட் ஆய்வாளராக வாஷிங்டன் டி.சி.யின் ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் வரும் வருடம் பணிபுரியவுள்ளார்.)